இலங்கைக்கு எதிராக சொதப்பிய வைபவ் சூர்யவன்ஷி..சதம் விளாசிய ருதுராஜ்
இலங்கை ஏ அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா ஏ அணியின் ருதுராஜ் கெய்க்வாட் சதம் விளாசினார்.
முத்தரப்பு தொடர்
இந்தியா ஏ மற்றும் இலங்கை ஏ அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு தொடர் போட்டி தம்புள்ளையில் நடந்து வருகிறது.
முதலில் ஆடிய இந்தியா ஏ அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 277 ஓட்டங்கள் எடுத்தது.
தொடக்க வீரராக களமிறங்கிய பிரப்சிம்ரன் 2 ஓட்டங்களிலும், வைபவ் சூர்யவன்ஷி 14 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.
ருதுராஜ் சதம்
அடுத்து பிரியன்ஷ் ஆர்யா 32 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்க, ருதுராஜ் மற்றும் திலக் வர்மா கூட்டணி ஓட்டங்களை சேர்த்தது.

சதம் அடித்த ருதுராஜ் கெய்க்வாட் (Ruturaj Gaikwad) 114 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 101 ஓட்டங்களில் அவுட் ஆனார்.
அணித்தலைவர் திலக் வர்மா 60 ஓட்டங்கள் எடுத்தார். இலங்கையின் தரப்பில் மொஹம்மது ஷிராஸ் 2 விக்கெட்டுகளும், சமிகா கருணரத்னே, கருக சங்கேத் மற்றும் வானுஜா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |