பாகிஸ்தானை ஆதரிக்கும் துருக்கி... பாரிய ஒப்பந்தம் ஒன்றை ரத்து செய்து தக்க பதிலடிக்கு தயாராகும் அரசு நிறுவனம்
பயங்கரவாதிகளுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாகிஸ்தானை ஆதரித்த துருக்கி அரசுக்கு எதிராக இந்தியா கடுமையான நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளது.
துமாஸ் உடனான ஒப்பந்தம்
நாடு முழுவதும் உள்ள மக்கள் துருக்கியையும் அதன் பொருட்களையும் புறக்கணிக்கக் கோருகின்றனர். தற்போது, இந்திய ரயில்வேயிலிருந்து மற்றொரு பெரிய நடவடிக்கை துர்க்கிக்கு எதிராக வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரயில்வே அமைச்சகத்தின் கீழ் உள்ள பொதுத்துறை நிறுவனமான ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் (RVNL), துருக்கிய பொறியியல் நிறுவனமான துமாஸ் உடனான ஒப்பந்தத்தை முடிவுக்குக் கொண்டுவர திட்டமிட்டுள்ளது.
வெளியான தகவல்களின் அடிப்படையில், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் துமாஸுடன் RVNL ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இந்த ஒப்பந்தம் ரயில்வே மற்றும் மெட்ரோ அமைப்புகள் போன்ற உள்கட்டமைப்பு திட்டங்களில் ஒத்துழைப்புடன் தொடர்புடையது.
ஆனால் ஒப்பந்தம் முன்னெடுக்கப்பட்டு ஒரு வருடம் கடந்தும் இந்த ஒப்பந்தத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை என்று RVNL வட்டாரங்கள் கூறுகின்றன. RVNL தற்போது துமாஸுடன் முடிவு செய்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை (MoU) நிறுத்தி வைப்பது குறித்து பரிசீலித்து வருகிறது.
வெளிப்படையாக ஆதரவளித்ததால்
இடைநீக்கத்திற்குப் பிறகு, ஒப்பந்தம் முற்றிலுமாக ரத்து செய்யப்படலாம் என்றே கூறப்படுகிறது. மேலும், இந்தக் கூட்டாண்மை இனி தேவையா என்பதை நிறுவனம் மதிப்பாய்வு செய்தும் வருகிறது.
தேவைப்பட்டால், RVNL வேறொரு நாட்டைச் சேர்ந்த ஒரு நிறுவனத்துடன் கூட்டு சேரலாம் என்றும் கூறப்படுகிறது. RVNL நிறுவனம் ஏற்கனவே ஐக்கிய அரபு அமீரகம், ஐரோப்பா, தென் கொரியா மற்றும் ஸ்பெயின் உள்ளிட்ட பல நாடுகளின் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுகிறது.
இந்த ஒத்துழைப்புகள் பொது-தனியார் கூட்டாண்மை திட்டங்களில் RVNL இன் திறன்களை மேம்படுத்த உதவுகின்றன. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாகிஸ்தானுக்கு வெளிப்படையாக ஆதரவளித்ததால், துருக்கி இந்தியாவில் அதிகரித்து வரும் கோபத்தை எதிர்கொள்கிறது.
இந்திய அரசாங்கத்தின் சமீபத்திய நடவடிக்கைகள் அனைத்தும் இந்தியா தனது தேசிய நலன்களுக்கு எதிராகச் செல்லும் நாடுகளுடனான தனது உறவுகளை மறுபரிசீலனை செய்து வருவதைக் காட்டுகின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |