ஐரோப்பிய கார்ப்பரேட் வரலாற்றிலேயே... 100 மில்லியன் யூரோ ஊக்கத்தொகை பெறவிருக்கும் CEO
அயர்லாந்தின் Ryanair நிறுவனத்தில் அதன் தற்போதைய தலைமை நிர்வாக அதிகாரி Michael O'Leary நீடிப்பார் என்றால் அவருக்கு 100 மில்லியன் யூரோ ஊக்கத்தொகை அளிக்க Ryanair நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
ஊக்கத்தொகையாக
Ryanair நிறுவனத்தின் பங்குகள் இந்த வாரம் வியாழக்கிழமை எதிர்பார்த்த இலக்கை எட்டியதை அடுத்தே பெருந்தொகையை ஊக்கத்தொகையாக அளிக்க நிர்வாகம் முடிவுக்கு வந்துள்ளது.
எதிர்வரும் 2028 ஜூலை மாதம் இறுதி வரையில் O'Leary Ryanair நிறுவனத்தில் நீடிப்பார் என்றால் அவருக்கு 111 மில்லியன் யூரோ மதிப்பிலான பங்குகளை அளிக்க நிறுவனம் முன்வந்துள்ளது.
Ryanair பங்குகள் தொடர்ந்து 28 நாட்கள் 21 யூரோ தொகைக்கு மேல் நிலைகொண்டதாக கூறப்படுகிறது. 100 மில்லியன் யூரோ ஊக்கத்தொகை என்பது ஐரோப்பிய கார்ப்பரேட் வரலாற்றிலேயே மிகப்பெரிய வாய்ப்புகளில் ஒன்று என்றே கூறுகின்றனர்.
மட்டுமின்றி கால்பந்து நட்சத்திரங்களின் சம்பளத்துடன் ஒப்பிடும்போது இந்த ஊக்கத்தொகையானது அதிகம் என்றே தெரிவிக்கின்றனர். Ryanair விமான நிறுவனமானது ஆண்டுக்கு 1.6 பில்லியன் யூரோக்கள் வரிக்குப் பிந்தைய லாபத்தைப் பதிவு செய்ததும் முதன்மை காரணமாக கூறப்படுகிறது.
ஐரோப்பாவின் மிகப்பெரிய
Ryanair நிறுவனத்தில் கடந்த 30 ஆண்டுகளாக தலைமை நிர்வாக அதிகாரியாக செயல்பட்டுவரும் O'Leary பயணிகள் எண்ணிக்கை அடிப்படையில், Ryanair-ஐ ஒரு சிறிய ஐரிஷ் பிராந்திய விமான நிறுவனத்திலிருந்து ஐரோப்பாவின் மிகப்பெரிய விமான நிறுவனமாக மாற்ற உதவியுள்ளார்.
மேலும், அவர் 44.1 மில்லியன் பங்குகளுடன் Ryanair நிறுவனத்தின் எட்டாவது பெரிய பங்குதாரராக உள்ளார், இது நிறுவனத்தின் மொத்த பங்குகளில் 4.15 சதவீதமாகும். 111 மில்லியன் யூரோ என்பது இந்திய மதிப்பில் சுமார் ரூ 1076 கோடி.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |