அந்த 5 நிமிட கேப்புல சச்சினை அவுட்டாக்கிருவோம்! பல முறை சச்சினின் விக்கெட்டை வீழ்த்திய மாண்டி பணேசர் விளக்கம்
இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர ஆட்டக்காரரான சச்சினின் விக்கெட்டை எப்படி அதிக முறை வீழ்த்த முடிந்தது என்பதன் ரகசியத்தை இங்கிலாந்து அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் மாண்டி பணேசர் கூறியுள்ளார்.
கிரிக்கெட் உலகில் பல பவுலர்களின் பந்து வீச்சை அசால்ட்டாக எதிர் கொண்டுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர், குறிப்பாக சிலர் பந்துவீச்சுகளில் திணறுவது உண்டு.
அப்படி இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் மாண்டி பணேசர் ஆகியோரின் பந்து வீச்சில் சச்சின் கொஞ்சம் சொதப்புவார். இதன் காரணமாக ஜேம்ஸ் ஆண்டர்சன் சச்சினை 9 முறையும் மாண்டி பணேசர் 11 முறையும் அவுட்டாக்கியுள்ளனர்.
இது குறித்த ரகசியத்தை மாண்டி பணேசர் இப்போது கூறியுள்ளார். அதில், ஒவ்வொரு போட்டியிலும் உணவு அல்லது தேனீர் இடைவேளை முடிந்தவுடன், முதல் ஐந்து நிமிடங்களில் அவர் தனது இயல்பான ஆட்டத்தை தொடங்க சில நிமிடங்கள் எடுத்துக் கொள்வார்.
அந்த ஐந்து நிமிடங்களுக்குள் அவரது விக்கெட்டை மிக சுலபமாக கைப்பற்றலாம். ஆனால் ஒருவேளை முதல் ஐந்து நிமிடங்களுக்குள் அவரது விக்கெட்டை கைப்பற்ற முடியாமல் போனால் நிச்சயமாக அதற்குப் பின்னர் அவரது விக்கெட்டை கைப்பற்றவே முடியாது.
இதன் காரணமாக்வே நானும், ஆண்டர்சனும் இடைவேளை முடிந்த முதல் ஐந்து நிமிடங்களுக்குள் முடிந்தவரை அவருக்கு பந்துவீசி அவரது விக்கெட்டை எடுத்து விடுவோம் என்று கூறியுள்ளார்.