கோஹ்லியை, சச்சின் காலில் விழ வைத்த யுவராஜ்-இர்பான் பதான்! ஏன் தெரியுமா? பலருக்கும் தெரியாத தகவல்
இந்திய அணியின் மாஸ்டர் பிளாஸ்டர் என்றழைக்கப்படும் சச்சினின் காலில் கோஹ்லி விழுந்து ஆசிர்வாதம் கேட்ட சம்பவத்தின் பின்னணி என்ன என்பது தற்போது தெரியவந்துள்ளது.
கிரிக்கெட் உலகின் கடவுள் என்று போற்றப்படும் சச்சின் டெண்டுல்கரை, எந்த ஒரு வீரர் பார்த்தாலும், உடனடியாக அவரிடம் பேசுவதற்கு எப்போது வாய்ப்பு கிடைக்கும் என்று காத்துக் கிடப்பர்.
அந்த வகையில், இந்திய அணிக்குள் நுழைந்த காலகட்டத்தில், கோஹ்லியிடம், யுவராஜ் சிங், இர்பான் பதான் மற்றும் முனாப் பட்டேல் போன்றோர், இந்திய அணிக்கு புதிதாக வரும் வீரர்கள் யாராக இருந்தாலும் டெண்டுல்கர் இடம் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
இதை அப்படியே கோஹ்லி, உடனே சென்று சச்சின் டெண்டுல்கரின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கியுள்ளார்.
முற்றிலும் இதை எதிர்பார்க்காத சச்சின் கோஹ்லியிடம் ஏன் இது மாதிரி செய்தாய் நீ என் காலில் விழுவது எனக்கு சுத்தமாக பிடிக்காது என்று கூற, உடனே அருகில் இருந்த யுவராஜ், பதான், பட்டேல் ஆகிய வீரர்கள் சத்தமாக சிரித்துள்ளனர்
அதற்குப் பிறகுதான் கோஹ்லியை அவர்கள் பிராங்க் செய்துள்ளது, சச்சினுக்கு தெரியவந்தது. இந்த சுவாரஸ்ய சம்பவம் குறித்து சச்சின் சமீபத்திய பேட்டி ஒன்றில் நினைவு கூர்ந்துள்ளார்.
இவர்கள் கிண்டல் அடிக்கிறார்கள் என்று தெரிந்த பின்பும், கோஹ்லி எந்த ஒரு கோபத்தையும் வெளிப்படுத்தாமல், அமைதியாகவே இருந்தாராம்.