கொல்கத்தாவிடம் மும்பை தோற்ற பிறகும் அபு தாபியை அதிர வைத்த ஒருவரின் பெயர்! இணையத்தில் வைரலாகும் வீடியோ
அபு தாபியில் நேற்று மும்பை-கொல்கத்தா போட்டிக்குப் பிறகு மைதானத்தில் இருந்த ரசிகர்கள் சச்சின்.. சச்சின் என முழங்கியது அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.
நேற்று அபு தாபியில் உள்ள Sheikh Zayed மைதானத்தில் நடந்த போட்டியில் மும்பை அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வீழ்த்தியது.
போட்டிக்கு பின் பவுண்டரி கோட்டிற்கு அருகே வந்த இந்திய ஜாம்பவானும், மும்பை அணியின் ஆலோசகருமான சச்சின் டெண்டுல்கர், கொல்கத்தா வீரர்களுக்கு கை கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.
சச்சினை பார்த்தவுடன் மைதானத்தில் இருந்த ரசிகர்கள், சச்சின்.. சச்சின் என முழங்கி மைதானத்தையே அதிர வைத்தனர்.
நீண்ட காலத்திற்கு பிறகு சச்சின்.. சச்சின் என்ற ழுழக்கம் மைதானத்தை அதிர வைத்தது அங்கிருந்த வீரர்கள் உட்பட பலரை நெகிழ வைத்தது.
Another all-round performance 💪
— IndianPremierLeague (@IPL) September 23, 2021
Another incredible win for @KKRiders as they beat #MumbaiIndians by 7 wickets 👍
Scorecard 👉 https://t.co/SVn8iKC4Hl#VIVOIPL #MIvKKR pic.twitter.com/kEgrkLi4KH
ஐபிஎல் போட்டியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு 2013 முதல் மும்பை அணியின் ஆலோசகராக சச்சின் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.