என்னால் சரியாக தூங்க முடிந்ததில்லை! ஒரு பதற்றம் இருக்கும்... மனம் திறந்து பேசிய ஜாம்பவான் சச்சின்
என் கிரிக்கெட் வாழ்க்கையின் 10 முதல் 12 ஆண்டுகள் ஒவ்வொரு போட்டிக்கும் முந்தைய இரவுகளில் என்னால் சரியாக தூங்க முடிந்ததில்லை என சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் அளித்த பேட்டியில், கிரிக்கெட் வாழ்க்கையின் 10 முதல் 12 ஆண்டுகள் ஒவ்வொரு போட்டிக்கும் முந்தைய இரவுகளில் என்னால் சரியாக தூங்க முடிந்ததில்லை.
என் மூளையில் போட்டி குறித்த எண்ணங்கள் ஓடிக்கொண்டே இருக்கும். படுக்கையில் புரண்டுப்படுத்தாலும் தூக்கம் சரியாக வராது. ஒரு பதற்றம் இருக்கும்.
பின்பு போட்டிக்கு முன்பாக பதற்றமடைவதால் பயனில்லை, மாறாக அதற்கு ஏற்ப நாம் தயாராக வேண்டும் என்பதை புரிந்துக்கொண்டேன்.
விளையாடுவது வெறும் உடல் சார்ந்தது மட்டுமல்ல மனம் சார்ந்ததும் கூட. அதனால் போட்டியன்று நிச்சயம் நான் பதற்றமாகக் கூடாது என்று முடிவெடுத்தேன்.
அதற்கு தூக்கமும் மிக அவசியம். பின்பு நான் என்னைப் பற்றி நன்றாக புரிந்துக்கொண்டேன் என கூறியுள்ளார்.