இன்று நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் ஜொலிக்க போகும் வீரர் இவர்தான்! சச்சின் டெண்டுல்கர் கணிப்பு
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி இன்று நடைபெறவுள்ள நிலையில் இதில் ஜொலிக்க போகும் வீரர் குறித்து ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கணித்துள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வந்த உலகின் முதல் டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் தொடர் ஒருவழியாக கிளைமேக்ஸை நெருங்கிவிட்டது.
இன்னும் சில மணி நேரங்களில் தொடங்க இருக்கும் இப்போட்டியில் இந்தியாவும், நியூசிலாந்தும் மோத இருக்கின்றன.
உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியிருக்கும் இப்போட்டி குறித்த எதிர்பார்ப்பு பல மடங்கு எகிறியிருக்கும் நிலையில் இறுதிப் போட்டியில் இந்திய அணியின் துருப்புச் சீட்டாக ஜஸ்பிரித் பும்ரா இருப்பார் என இந்திய அணியின் ஜாம்பவான் சச்சின் கூறியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
சச்சின் டெண்டுல்கர் அளித்துள்ள போட்டியில் ஜஸ்பிரித் பும்ராவின் பவுலிங் ஆக்ஷன் சற்று வித்தியாசமாக இருந்தாலும் அது பேட்ஸ்மேனுக்கு சிறிது சிரமத்தையும் ஏற்படுத்தும்.
பும்ரா ஒரு பவுலர் சிறப்பாக பந்துவீசுகிறார் என அறிந்தால் எதிர் முனைக்கு சென்றுவிடுங்கள் என எனக்கு சொல்லியிருக்கிறார்கள் என கூறி சிரித்த சச்சின், ஜோக்குகளை கடந்து பும்ரா ஒரு உலகத் தரம் வாய்ந்த பந்துவீச்சாளர் என தெரிவித்தார்.
நெட் பிராக்டீசின் போது பும்ராவின் பந்துவீச்சை எதிர்கொண்டிருக்கிறேன். அவரின் பவுலிங் ஆக்ஷன் ஒரு மாதிரியாக வித்தியாசமாக இருக்கும். ஆனால் நாம் நினைப்பதற்கும் மாறாக அவரிடம் வேகம் இருக்கும்.
அவரின் பந்துவீச்சை எதிர்கொள்ள நமக்கு மிகவும் குறைவான நேரமே கிடைக்கும். பேட்ஸ்மேன் சிறிது கவனம் சிதறினாலும் கூட அவரிடம் வீழ்ந்துதான் போக வேண்டும். ஆரம்பகட்ட ஓவர்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
அவரின் பவுலிங் ஆக்ஷனை பேட்ஸ்மேனின் மனது புரிந்துகொள்வதற்குள் காட்சிகள் மாறிப்போகக் கூடும். ஆரம்பகட்ட ஓவர்களில் பும்ராவின் பங்கு மிகவும் முக்கியமானதாக அமையும் என கூறியுள்ளார்.