லண்டனின் புதிய மேயர் இவர் தான்! முடிந்தது வாக்கு எண்ணிக்கை! சற்று முன் வெளியான அறிவிப்பு
லண்டனில் நடைபெற்ற புதிய மேயருக்கான தேர்தலில், கன்சர்வேடிவ் கடசியின் போட்டியாளரான ஷான் பெய்லியை வீழ்த்தி தொழிற்கட்சியின் சாதிக் கான் இரண்டாவது முறையாக மீண்டும் வெற்றி பெற்று லண்டன் மேயர் ஆகியுள்ளார்.
பிரித்தானியாவின் தலைநகரான லண்டனில் மேயருக்கான தேர்தல் நடைபெற்ற நிலையில், இதற்கான வாக்கு எண்ணிக்கையில், 55.2 சதவீத அதிக வாக்குகள் பெற்று தொழிற்கட்சியின் வேட்பாளர் Sadiq Khan மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.
இதில் கன்சர்வேடிவ் கடசியின் வேட்பாளரான Shaun Bailey 44.8 சதவீத வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்திலும், மூன்றாவது இடத்தில், பசுமைக் கட்சியின் Sian Berry-யும், நான்காவது இடத்தில் லிபரல் டெமக்ராட்டுகளின் Luisa Porritt-ம், ஐந்தாவது இடத்தை, The Lib Dems கட்சியின் Ms Porritt-யும் பிடித்தார்.
கடந்த 2016-ஆம் ஆண்டும் லண்டன் மேயரான சாதிக்கான், மக்களால் மிகவும் விரும்பப்பட்ட நபராக இருந்தார். இதுவே அவர் மீண்டும் வெற்றி பெறுவதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
அதே சமயம் கடந்த 2016 ஆம் ஆண்டில் பெற்ற வாக்குகளை இந்த முறை பெற முடியவில்லை. இருப்பினும், 228,000 வாக்குகளுடன் தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளார்.
சாதிக்கான் இது குறித்து கூறுகையில், நான் எப்போதும் அனைத்து லண்டன் மக்களுக்கும் மேயராக இருப்பேன், இந்த நகரத்தில் உள்ள ஒவ்வொரு நபரின் வாழ்க்கையையும் மேம்படுத்த வேலை செய்கிறேன்.
இங்கிலாந்தைச் சுற்றியுள்ள தேர்தல்களின் முடிவுகள் நம் நாட்டைக் காட்டுகிறது, நமது நகரம் கூட ஆழமாக பிளவுபட்டுள்ளது. பிரக்ஸிட்டின் வடுக்கள் இன்னும் குணமடையவில்லை.
லண்டன் மற்றும் நம் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பொருளாதார ஏற்றத்தாழ்வு மோசமடைந்து வருகிறது. இதை சரி செய்வோம் என்று குறிப்பிட்டார்.