உலகக்கிண்ணத்தில் முதல் சர்வதேச சதம் விளாசிய பாகிஸ்தான் வீரர்! வாழ்வை சாவா போட்டியில் அபாரம்
நமீபியா அணிக்கு எதிரான டி20 உலகக்கிண்ணப் போட்டியில் பாகிஸ்தானின் சாஹிப்ஸதா ஃபர்ஹான் முதல் சதத்தை பதிவு செய்தார்.
வாழ்வா? சாவா? போட்டி
சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில், நமீபியா அணிக்கு எதிரான வாழ்வா? சாவா? போட்டியில் பாகிஸ்தான் ஆடி வருகிறது.
கொழும்பில் நடந்து வரும் இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் முதலில் துடுப்பாடியது.
சைம் அயூப் 14 ஓட்டங்களில் வெளியேற, அணித்தலைவர் சல்மான் ஆகா 23 பந்துகளில் 2 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 38 ஓட்டங்கள் விளாசி ஆட்டமிழந்தார்.

சாஹிப்ஸதா ஃபர்ஹான்
பின்னர் வந்த நஃபே 5 ஓட்டங்களில் அவுட் ஆக, தொடக்க வீரர் சாஹிப்ஸதா ஃபர்ஹான் (Sahibzada Farhan) அதிரடி ஆட்டத்தில் மிரட்டினார். அவர் 57வது பந்தில் தனது முதல் சதத்தினை பதிவு செய்தார்.

இறுதிவரை களத்தில் நின்ற ஃபர்ஹான் 4 சிக்ஸர், 11 பவுண்டரிகளுடன் 100 ஓட்டங்கள் விளாசினார்.

ஷதாப் கான் 20 பந்துகளில் 29 ஓட்டங்கள் விளாச, பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 199 ஓட்டங்கள் குவித்தது.

நமீபியா தரப்பில் ஜேக் ப்ரஸ்ஸல் 2 விக்கெட்டுகளும், ஜெர்ஹார்ட் எராஸ்மஸ் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |