சர்ச்சையான நடிகை சாய்பல்லவி பேசிய பேச்சு! அவர் அளித்துள்ள விளக்கம்
மதத்தை வைத்து அரசியல் செய்வது குற்றம் என்பதை தான் கூறியதாக சாய்பல்லவி விளக்கமளித்துள்ளார்.
சமீபத்தில் காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்தில் காட்டப்பட்ட சம்பவமும், மாட்டிறைச்சி எடுத்துச் சென்ற இஸ்லாமியர்கள் கொல்லப்பட்ட சம்பவமும் ஒன்று தான் என்றும், அவை இரண்டும் மதவெறியால் நிகழ்ந்தவை என்றும் நடிகை சாய் பல்லவி கருத்து தெரிவித்தார்.
அவரது கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சாய் பல்லவிக்கு ஒருபுறம் பலத்த எதிர்ப்பும், மறுபுறம் ஆதரவும் தெரிவிக்கப்பட்டன. எம்.பி-யும், நடிகையுமான விஜயசாந்தியும் அவருக்கு கண்டனம் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் சாய் பல்லவி தனது கருத்து குறித்து விளக்கமளித்துள்ளார். அவர் கூறுகையில், இரண்டு சம்பவங்கள் குறித்து தான் கூறிய கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
மேலும், நடுநிலையான தனது கருத்தை சில பிரபலங்கள் சரியாக புரிந்துகொள்ளமால் கண்டனங்களை பதிவு செய்வது வேதனை அளிப்பதாகவும், மதத்தை வைத்து அரங்கேறும் வன்முறை குற்றமாகும் என்றும் தெரிவித்துள்ளார்.