ரூ.15000 கோடி சொத்து, ராஜ அரண்மனை உட்பட அனைத்தையும் இழக்கும் சைஃப் அலிகான்

Saif Ali Khan
By Yashini Jan 22, 2025 07:05 AM GMT
Report

பாலிவுட்டின் பிரபலமான நடிகர்களுள் ஒருவர் தான் சைஃப் அலிகான்.

1993ம் ஆண்டு பாலிவுட்டில் அறிமுகமான சைஃப் நூற்றுக்கணக்கான படங்களில் நடித்து பெரும் புகழ் பெற்றுள்ளார்.

இதனை தாண்டி சைஃப் அலிகான், பட்டோடி மற்றும் போபால் அரச குடும்பத்தின் வாரிசு.

மத்திய பிரதேச தலைநகரான போபால் நவாப் குடும்பத்தின் வாரிசுகளில் ஒருவர் மன்சூர் அலிகான் பட்டோடி.

இவர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன். மன்சூர் அலிகான் பட்டோடிக்கும், பிரபல நடிகை சர்மிளா தாகூருக்கும் பிறந்தவர் தான் நடிகர் சைஃப் அலிகான்.

ரூ.15000 கோடி சொத்து, ராஜ அரண்மனை உட்பட அனைத்தையும் இழக்கும் சைஃப் அலிகான் | Saif Ali Khans Property 15000 Crore In Trouble  

இந்நிலையில், சைஃப் அலிகான் தான் வாழ்ந்த ராஜ அரண்மனை உட்பட ரூ.15,000 கோடி சொத்துக்களை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அதாவது, போபாலின் கடைசி நவாப் ஹமீதுல்லா கான் அவருக்கு மூன்று மகள்கள் இருந்தனர்.

மூத்த மகள் அபிதா சுல்தான், இந்தியா பாகிஸ்தான் பிரிவினையை அடுத்து 1950இல் பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்தார். இதனால் அவரின் இந்திய குடியுரிமையும் பறிபோனது. 

இரண்டாவது மகள் சஜிதா சுல்தான், இந்தியாவில் தங்கி கிரிக்கெட் வீரர் இப்திகார் அலிகான் பட்டோடியை திருமணம் செய்துகொண்டார்.

மூத்த மகள் அபிதா இல்லாததால், சஜிதா போபால் நவாப் குடும்பத்தின் சட்டப்பூர்வ வாரிசானார்.

இந்த சஜிதா சுல்தானின் மகன் தான் சைஃப் அலிகானின் தந்தை மன்சூர் அலிகான் பட்டோடி. அந்தவகையில், சைஃப் அலிகான் போபால் ராஜ குடும்பத்தின் வாரிசாக உள்ளார். 

ரூ.15000 கோடி சொத்து, ராஜ அரண்மனை உட்பட அனைத்தையும் இழக்கும் சைஃப் அலிகான் | Saif Ali Khans Property 15000 Crore In Trouble  

பட்டோடி குடும்பத்துக்கு போபாலில் அரண்மனை, கட்டிடங்கள், நிலங்கள் என ரூ.15000 கோடி அளவுக்கு சொத்துக்கள் இருக்கின்றன.

இதற்கிடையே, இந்தியா மற்றும் பாகிஸ்தான் பிரிவினையின் போது பாகிஸ்தானுக்கு சென்றவர்களின் சொத்துகளை எதிரி சொத்துக்களாக கருதி அரசாங்கம் கையகப்படுத்த முடியும்.

எதிரி சொத்து என அறிவிக்கப்பட்டால் அந்த சொத்துக்கள் மத்திய அரசுக்கு செல்லும்.

இதன்அடிப்படையில், அபிதா சுல்தான் பாகிஸ்தான் குடியேறியதை காரணம் காட்டி, போபால் அரச குடும்ப சொத்துக்கள் அனைத்தையும் எதிரி சொத்துகளாக கடந்த 2014ல் அறிவித்த மத்திய அரசு, இதில் சஜிதா சுல்தான் சொத்துகளையும் கொண்டு வர நினைத்தது. 

இதனை எதிர்த்து 2015ல் மத்திய பிரதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார் சைஃப் அலிகான்.

இந்த மனுவை ஏற்றுக்கொண்டு மத்திய அரசுக்கு தடை விதித்த நீதிமன்றம், 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் அதே மனுவை தள்ளுபடியும் செய்தது.

ரூ.15000 கோடி சொத்து, ராஜ அரண்மனை உட்பட அனைத்தையும் இழக்கும் சைஃப் அலிகான் | Saif Ali Khans Property 15000 Crore In Trouble

காரணம், 2016ல் மத்திய அரசு பிறப்பித்த அரசாணையில் போபாலில் உள்ள நவாப் சொத்துகள் மீது வாரிசுகள் உரிமை கொண்டாட முடியாது என்று அறிவித்தது.

இந்த அரசாணை அடிப்படையில், நவாப் சொத்துக்களை கைப்பற்ற மத்திய அரசுக்கு விதித்திருந்த தடையை நீக்கிய நீதிமன்றம், வேண்டும்மென்றால் சைஃப் அலிகான் 30 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட தீர்ப்பாயத்தில் மேல் முறையீடு செய்து நிவாரணம் பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவித்தது. 

நீதிமன்றம் கெடு விதித்த அந்த 30 நாட்கள் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. எனினும், சைஃப் அலிகான் ரூ.15000 கோடி சொத்துகளுக்கு உரிமை கோரி எந்த மேல்முறையீடும் இதுவரை செய்யவில்லை.

இதனால், அந்த சொத்துக்களை அரசாங்கம் எடுத்துக்கொள்ள வாய்ப்பு உருவாகியுள்ளது.

இந்நிலையில், தான் வாழ்ந்த ராஜ அரண்மனை உட்பட ரூ.15000 கோடி சொத்துக்களை இழக்கும் துயரம் சைஃப் அலிகானுக்கு நேர்ந்துள்ளது.  

You May Like This Video


 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US