பிரித்தானியாவில் வரும் 21-ஆம் திகதி முதல் புதிய அபராதம் அறிமுகம்! சுகாதார அமைச்சர் சஜித் ஜாவித் அறிவிப்பு
பிரித்தானியாவில் சட்டத்தை பின்பற்றத் தவறும் நிறுவனங்களுக்கு செப்டம்பர் 21 முதல் புதிய அபராதங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று சுகாதார செயலாளர் தெரிவித்தார்.
பிரித்தானியாவில் பயணிகளுக்கு கோவிட் சோதனை மேற்கொள்ளும் நிறுவனங்கள் கட்டணத்தில் முறைகேடு செய்வதாகவும், மக்களிடம் அதிக பணம் வசூலிப்பதாகவும் புகார் எழுந்தது.
அதனைத் தொடர்ந்து, நாட்டின் போட்டி மற்றும் சந்தை ஆணையம் (Competition and Markets Authority), இது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு, பிரித்தானிய சுகாரத் துறை அமைச்சர் சஜித் ஜாவிதுக்கு வலியுறுத்தியது.
நடவடிக்கை எடுக்காத தவறினால், இன்னும் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுவார்கள் என எச்சரித்தது.
இந்நிலையில், செப்டம்பர் 21 முதல் புதிய அபராதங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று சஜித் ஜாவித் தெரிவித்தார்.
நேற்றிரவு இது குறித்து அறிக்கை வெளியிட்ட சஜித் ஜாவிட், விதிமுறைகளை மீறும் பயணிகள் சோதனை நிறுவனங்களுக்கு 10,000 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்படும் என அறிவித்தார்.
ஏற்கனவே, ஸ்பாட்-சோதனைகளின் போது பிடிபட்ட அரசாங்க வலைத்தளத்திலிருக்கும் 91 தனியார் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், 135 நிறுவங்கள் விளம்பரப்படுத்திய தவறான விலையை சரிசெய்யப்பட்டுள்ளது.
மேலும், அவர்கள் மீண்டும் தவறான விலைகளை விளம்பரப்படுத்தினால், அவர்களும் பட்டியலில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என ஜாவித் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.