வெளிநாட்டில் இருந்து தமிழகம் திரும்பிய இளம்பெண்ணுக்கு Omicron பாதிப்பு உறுதி! முக்கிய தகவல்
அமெரிக்காவில் இருந்து சேலம் திரும்பிய இளம்பெண்ணுக்கு Omicron பாதிப்பு உறுதி செய்ததையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சேலம் சூரமங்கலம் பகுதியை சேர்ந்த 28 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் அமெரிக்காவில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார்.
அவரை சென்னையில் 3 நாட்கள் தனிமைப்படுத்தி Omicron பாதிப்பு உள்ளதா? என்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு Omicron தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
அவர் ஏற்கனவே 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தி உள்ள நிலையில் பூஸ்டர் தடுப்பூசியும் போட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து அந்த பெண் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
அந்த பெண்ணிற்கு லேசான பாதிப்புகள் மட்டுமே காணப்பட்டதால் மேலும் தொற்று பரவாமல் இருக்க அவருக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மருத்துவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.