சாப்பிடும் உணவில் உப்பு அதிகரித்தால் என்ன நடக்கும் தெரியுமா?
அறுசுவைக்கும் தலைவனாய் திகழும் உப்பை உணவில் அதிகம் சேர்த்து கொண்டால் நிறைய ஆபத்து உள்ளது.
உங்கள் உணவில் உப்பின் அளவை குறைத்துக் கொள்வதன் மூலமாக புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்க முடியும். இது மற்றுமின்றி சிறுநீரகம், வயிறு சார்ந்த கோளாறுகளும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளலாம்.
நாம் சாப்பிடும் உணவில் உப்பின் அளவு 4 மி.கிராம் அளவைத் தாண்டினால், அது சிறுநீரகத்தை பாதிக்கும்.
உங்களது உடலில் உப்புச்சத்து அதிகரிக்கும் போது பக்கவாதமும் ஏற்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
உடலில் உப்புச்சத்து அதிகரிக்கும் போது இரத்த அழுத்தம் அதிகரிக்கும் , இதன் காரணமாக உங்களுக்கு நீரிழிவு நோய் அதிகரிக்கும். எனவே, இரத்த கொதிப்பு இருப்பவர்கள் உணவில் கட்டாயம் உப்பை குறைத்துக் கொள்ளுங்கள்.
இவையெல்லாம் உணவில் உப்பை அதிகமாக சேர்த்துக் கொள்ளவதால் வரும் பிரச்சனைகள். இதை தவிர்க்க ஒரேடியாக உணவில் உப்பை குறைத்து விடவும் கூடாது. உடலுக்கு தேவையான உப்பின் அளவை குறைத்தால் அது உயிருக்கே ஆபத்து ஆகிவிடும் என்று ஒரு ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.
எனவே, இதற்கு ஒரே தீர்வு உணவில் சீரான அளவு உப்பு எடுத்துக் கொள்வது தான்.