டோனி பிடித்த அற்புதமான கேட்ச்! நோ பால் கொடுத்த நடுவர்: ஏன் தெரியுமா? கொடுக்கப்பட்ட விளக்கம்
ஐபிஎல் தொடரில் டோனி கஷப்பட்டு பிடித்த கேட்சை நடுவர் நோ பால் கொடுத்த நிலையில் அதன் பின்னணி என்ன என்பது தெரியவந்துள்ளது.
ஐபிஎல்லின் இன்றைய போட்டியில் டோனி தலைமையிலான சென்னை அணியும், இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா அணியும் விளையாடி வருகின்றன.
இதில் நாணய சுழற்சியில் வென்ற கொல்கத்தா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன் படி ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 171 ஓட்டங்கள் எடுத்தது.
இப்போட்டியில், கொல்கத்தா அணியின் அதிரடி ஆட்டக்காரர், ராகுல் திரிபதி 33 பந்தில் 45 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இருப்பினும் இப்போட்டியின் போது சாம்கரன் வீசிய பவுன்சர் பந்தை ராகுல் திரிப்பாட்டி அடித்து ஆட முயன்றார்.
ஆனால் பந்தானது பேட்டில் பட்டு, விக்கெட் கீப்பர் டோனி கேட்ச் பிடித்து அவுட் என்று கேட்க, உடனே நடுவர் அது அவுட் கொடுக்காமல் இருந்தார்.
இதனால் இதைக் கண்ட ரசிகர்கள் ஏன் அவுட் கொடுக்கவில்லை என்று யோசித்துக் கொண்டிருந்த போது, இதே ஓவரில் சாம்கரன் ஒரு பவுன்சர் பந்தை வீசியுள்ளார்.
ஒரு ஓவருக்கு ஒரு பவுன்சர் மட்டுமே அனுமதி, இரண்டாவது முறையாக சோல்டருக்கு மேலே பவுன்சர் வீசியதால், நடுவர்கள் மூன்றாவது நடுவரிடம் இது குறித்து சந்தேகம் கேட்க, மூன்றாவது நடுவரும் இதை உறுதி செய்து, நோ பால் கொடுத்தார்.
இதனால் அந்த பந்து ப்ரீ ஹிட் என்று கொடுக்கப்பட்டது. அந்த பந்தையும் திரிபாட்டி சிக்ஸர்க்கு பறக்கவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.