சுக்கலாக நொறுங்கிய வாகனம்: கோர விபத்தில் சிக்கிய ஒரே குடும்பத்தில் நால்வர்
பிரித்தானியாவின் கென்ட் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த வாகன விபத்தில் சிக்கி ஒரே குடும்பத்தில் நால்வர் பலியான சம்பவம் மொத்த குடும்பத்தையும் உலுக்கியுள்ளது.
பிரித்தானிய குத்துச்சண்டை வீரர் டைசன் ப்யூரியின் போட்டியை காணச் சென்ற நிலையிலேயே அவர்களின் வாகனம் கோர விபத்தில் சிக்கியுள்ளது. கட்டுப்பாட்டை இழந்த Toyota Hi Lux வாகனம் மரங்களுக்கு இடையே புகுந்து விபத்துக்குள்ளானது.
வாகனத்தின் முன்பகுதி மொத்தமாக சிதைந்து உருக்குலைந்து காணப்படுகிறது. இந்த விபத்தில் 44 வயதான ஜான் கேஷ், இவரது 19 வயது மகன் ஜான்பாய் கேஷ், சமீபத்தில் தான் இவர் தந்தையானதாக கூறப்படுகிறது. எஞ்சிய இருவர், 18 வயதான ஜாகோ காஸ்க்ரோவ் மற்றும் 25 வயதான ஸ்மைலர் கேஷ் என உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இவர்களுடன் சாரதியாக சென்ற 15 வயது ஜெர்ரி கேஷ் என்பவர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜாகோவின் மனைவி கர்ப்பமாக இருக்கிறார் என்ற தகவல் அறிந்த சில நாட்களிலேயே, இந்த கோர விபத்தில் அவர் சிக்கியுள்ளார். மட்டுமின்றி, 6 வாரங்களுக்கு முன்னர் தான் ஜான்பாய் தந்தையானார்.
விபத்து தொடர்பில் தகவல் வெளியானதும் மொத்த குடும்பமும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது. இந்த கோர விபத்து தொடர்பில் கென்ட் பொலிசார் விசாரணை முன்னெடுத்துள்ளனர். மேலும், விபத்தின் போது நேரில் பார்த்தவர்கள் சாட்சியம் அளிக்க முன்வர வேண்டும் என்ற கோரிக்கையும் பொலிஸ் தரப்பில் முன்வைக்கப்பட்டுள்ளது.