அடுத்தடுத்து உயிரிழந்த 4 மகன்கள்! அழுது கொண்டே தூங்கிய தாய் பேரதிர்ச்சியில் மரணம்
தமிழகத்தில் 4 மகன்களும் கொரோனாவுக்கு பலியானதை அறிந்த தாய், பேரதிர்ச்சியில் உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது.
திருப்பூரின் குன்னத்தூர் அருகே வெள்ளிரவெளி கிராமத்தை சேர்ந்தவர் பாப்பம்மாள், இவருக்கு தங்கராஜ், ராஜா, சவுந்தரராஜன், தெய்வராஜ் என்ற 4 மகன்கள் உண்டு.
மகன்கள் தனித்தனியாக வசித்து வரும் நிலையில், அடிக்கடி வந்து தாயை சந்தித்து விட்டு செல்வது வழக்கம், மருமகள்களும் பாப்பம்மாளை நன்கு கவனித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் இளையமகனான தெய்வராஜ்(வயது 42), இவரின் மனைவி சாந்தி ஆகியோர் சில நாள்களுக்கு முன் கொரோனாவால் உயிரிழந்தனர்.
இதனை தொடர்ந்து அவரது சகோதரர்களுக்கும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
இதற்கிடையே தன்னை மகன்கள் யாரும் பார்க்க வராததால், அக்கம்பக்கத்தினரிடம் அடிக்கடி விசாரித்து வந்துள்ளார் பாப்பம்மாள்.
அப்போது தான் மகன்கள் நால்வரும் உயிரிழந்தது தெரியவந்தது, இதனால் கதறி அழுத பாப்பம்மாளை உறவினர்கள் தேற்றியதுடன் தூங்கவைத்துள்ளனர், ஆனால் இரவு உறக்கத்திலேயே பாப்பம்மாள் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.