ரஷ்யா மீது தடைகள் விதித்தால் இது தான் நடக்கும்! வெளிப்படையாக போட்டுடைத்த அமெரிக்கா
ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டால் ஏற்படும் விளைவு குறித்து அமெரிக்கா வெளியுறவுத்துறை செயலாளர் வெளிப்படையாக கூறியுள்ளார்.
ஐரோப்பிய நாடான உக்ரைன் எல்லைக்கு அருகே ரஷ்யா அதன் படைகளை குவித்து வருவதால் இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் நிலவி வருகிறது.
உக்ரைனை ஆக்கிரமித்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவை எச்சரித்துள்ளன.
சில தினங்களுக்கு முன் பிரித்தானியா, அமெரிக்க நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதங்களை அனுப்பியுள்ளன.
இதனிடையே ரஷ்ய ஆதரவு பெற்ற தலைவரை உக்ரைனில் ஆட்சியில் அமர்த்த புடின் அரசாங்கம் திட்டமிட்டு வருவதாக பிரித்தானியா குற்றம்சாட்டியுள்ளது.
இந்நிலையில் தனியார் ஊடக நேர்காணலில் கலந்துக்கொண்டு பேசிய அமெரிக்கா வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன், பிரித்தானியாவில் முன்னர் விவரிக்கப்பட்டதைப் போலவே ரஷ்யாவின் சாத்தியமான திட்டங்களைப் பற்றி அமெரிக்கா எச்சரித்தது.
இப்போது ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டால், உக்ரைனுக்கு எதிரான சாத்தியமான ரஷ்ய ஆக்கிரமிப்பைத் தடுக்கும் திறனை மேற்கத்திய நாடுகள் இழந்துவிடும்.
கூடுதலாக ரஷ்யப் படை உக்ரைனுக்குள் ஆக்ரோஷமான முறையில் நுழைந்தால், அந்த நடவடிக்கை குறிப்பிடத்தக்க பதில் நடவடிக்கையை தூண்டும் என்றும் ஆண்டனி பிளிங்கன் கூறியுள்ளார்.