பிரித்தானியாவில் பட்டப்பகலில் 15 வயது சிறுவனும் 34 வயது பெண்ணும் செய்த பயங்கரமான செயல்! இருவரும் கைது..
பிரித்தானியாவில் பட்டப்பகலில் 31 வயது நபர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக ஒரு சிறுவனும் பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இங்கிலாந்தில் Sandwell, West Midlands-ல் ஸ்மெத்வெக் பகுதியில் உள்ள லண்டன்டெர்ரி சாலையில் கடந்த சனிக்கிழமை மாலை 4 மணியளவில் குறித்த சம்பவம் நடந்துள்ளது.
சம்பவ இடத்துக்கு பொலிஸார் விரைந்து வந்து பார்த்தபோது, அங்கு 31 வயது ஆண் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு இரத்த வெள்ளத்தில் கிடந்தார். அவரை பொலிஸார் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பாதிக்கப்பட்ட அந்த நபர் தற்போது சிகிச்சை பெற்று பத்திரமாக வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், சம்பவ இடத்தில் BMW கார் ஒன்று அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு நேரடி தொடர்புடைய 15 வயது சிறுவன் மற்றும் 34 வயது பெண் ஆகிய இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அவர்களை தங்கள் காவலில் வைத்து தொடர்ந்து விசாரணை செய்துவருவதாக வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் காவல்துறையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக சிசிடிவி மற்றும் புகைப்படங்கள் பொதுமக்களிடமிருந்து கிடைத்துள்ளதாகவும், மேலும் தகவல் தெரிந்தவர்கள் 101-ஐ அழைக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.