இலங்கை ஒரு சிறந்த கலைஞரை இழந்துவிட்டது! மூத்த நடிகர் ஜாக்சன் ஆண்டனி மறைவுக்கு குமார் சங்கக்காரா உருக்கமான இரங்கல் பதிவு
இலங்கையின் மூத்த நடிகரான ஜாக்சன் ஆண்டனியின் இறப்புக்கு, முன்னாள் கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்காரா இரங்கல் தெரிவித்துள்ளார்.
மூத்த நடிகர்
கடந்த 2022ஆம் ஆண்டு சூலை 02ஆம் திகதி இலங்கையின் பிரபல நடிகரான ஜாக்சன் ஆண்டனி விபத்தில் சிக்கினார்.
தலாவாவில் (Thalawa) அவர் தனது சகோதரர் சமன் அந்தோணியுடன் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு திரும்பியுள்ளார்.
அப்போது அவர்கள் பயணித்த வாகனத்தை காட்டு யானை மோதியதில் ஜாக்சன் படுகாயமடைந்தார்.
அதனைத் தொடர்ந்து கொழும்பில் உள்ள தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 14 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த ஜாக்சன் அந்தோணி, நேற்றைய தினம் தனது 65வது வயதில் காலமானார்.
சங்கக்காரா இரங்கல்
இந்த நிலையில் ஜாக்சன் அந்தோணியின் மறைவுக்கு இலங்கை கிரிக்கெட்டின் முன்னாள் வீரரான குமார் சங்கக்காரா இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'ஜாக்சன் அந்தோணியின் மறைவால் இலங்கை ஒரு சிறந்த கலைஞரை இழந்துவிட்டது. அவரது ஆத்மா சாந்தியடையட்டும்' என கூறியுள்ளார்.
Reuters / Dinuka Liyanawatte
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |