சனியின் வக்ர பெயர்ச்சி! அடுத்த மாதம் முதல் இந்த ஆறு ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டுமாம்

Sani Peyarchi Horoscope
By Kishanthini May 21, 2022 12:30 PM GMT
Report
Courtesy: oneindia

சனிபகவான் தற்போது கும்ப ராசியில் அமர்ந்திருக்கிறார் என்றாலும் விரையில் வக்ரநிலையில் சஞ்சரிக்கப் போகிறார்.

ஜூன் 5ஆம் தேதி முதல் அக்டோபர் 23ஆம் தேதி வரைக்கும் சுமார் 141 நாட்கள் வக்ரகதியில் சஞ்சரிக்கப்போகும் சனிபகவானால் மேஷம் முதல் மீனம் வரை எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

மேஷம்

வேலையில் பளு அதிகரிக்கும். சிலருக்கு வேலை மாற்றம் ஏற்படும். வீடு மாற வாய்ப்பு உள்ளது. புதிய வண்டி வாகனம் வாங்குவீர்கள். சுய தொழில் செய்பவர்கள் பணத்தை அதிகம் முதலீடு செய்ய வேண்டாம். உழைப்பு அதிகமாக இருந்தாலும் ஊதியம் குறைவாகவே இருக்கும்.

பொறுமை அவசியம். மாணவர்களுக்கு நல்ல எதிர்காலம் அமையும் வகையில் பள்ளி, கல்லூரிகளில் இடம் கிடைக்கும்.

ரிஷபம்

சனி பகவான் உங்க ராசிக்கு பத்தாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். வக்ர மடைந்துள்ள இந்த கால கட்டத்தில் தேவையற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். சோம்பேறித்தனத்தை விட்டு ஒழியுங்கள். உடன் பிறந்தவர்களால் மன வருத்தங்கள் எற்படும். தடைகள் நிவர்த்தியாகும்.

உயர்கல்வி படிப்பவர்களுக்கு சிறு தடைகள் ஏற்பட்டு பின்னர் நிவர்த்தியாகும். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. வண்டி வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. சிறு சிறு விபத்துக்கள் எற்படலாம்.

மிதுனம்

சனிபகவானால் உங்களுக்கு எந்த பாதிப்பு இல்லை நன்மையே அதிகம் நடக்கிறது. புதிய வேலை கிடைக்கும். சுபகாரியங்களால் மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமணம் நடைபெறும், குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு நல்ல செய்தி வரும். நண்பர்களால் நன்மைகள் அதிகம் நடக்கும்.

கோவில்களுக்கு ஆன்மீக பயணம் செல்வீர்கள். விஐபிக்கள், அரசியல்வாதிகளின் நட்பு கிடைக்கும். நன்மைகள் அதிகம் நடைபெறும் காலம் என்பதால் வெற்றி நடை போடுங்கள்.

நோய் பாதிப்புகளால் சிலருக்கு அறுவை சிகிச்சைகள் செய்ய வேண்டியிருக்கும். கவனம் தேவை. ஒருமுறை குச்சனூர் சென்று சனிபகவானை தரிசனம் செய்து வாருங்கள்.

கடகம்

அஷ்டமத்து சனி ஆட்டிப்படைத்துக்கொண்டு உள்ளது. நான்கு மாத காலம் கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு விடுங்கள். சனியின் சஞ்சாரத்தினால் வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.

வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். மதிப்பும் மரியாதையும் கூடும். புதிய செயல்களை செய்யும் போது எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்யுங்கள். வேலைப்பளு அதிகரிக்கும். காதல் விவகாரங்கள் கை கூடும்.

திருமணம் நடைபெறும். தேவையில்லாத ஆடம்பர செலவுகளை தவிர்த்து விடுங்கள். கோவில்களுக்கு சென்று இஷ்ட தெய்வங்களை வழிபடுவதன் மூலம் கஷ்டங்கள் காணாமல் போகும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.

சிம்மம்

கண்ட சனி கழுத்தை நெரித்திருக்கும். இந்த நான்கு மாத காலம் நிம்மதியாக இருங்கள். உடம்பிலும் மனதிலும் உற்சாகம் அதிகரிக்கும் சுறுசுறுப்பாக வேலை செய்வீர்கள். காதல் கைகூடும். வீட்டில் சுப காரியங்கள் நடைபெறும்.

வேலை மாற்றம் ஏற்படும் யோசித்து செயல்படுவீர்கள். இருக்கிறதை விட்டுட்டு பறக்கிறதுக்கு ஆசைப்படாதீர்கள். பொன், பொருள், ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும்.

உல்லாச பயணம் செல்வீர்கள். சுப விரையம் ஏற்படும். பிள்ளை இல்லையே என்று கவலைப்பட்டவர்களின் மனக்கவலை தீரும். ஆன்மீக பயணம் மனதிற்கு அமைதியை தரும்.

கன்னி

ருண ரோக சத்ரு சனியால் எதிரிகள் தொல்லை ஒழிந்தது. சனிபெயர்ச்சி உங்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக்கொடுத்துக்கொண்டிருக்கிறது. சனி வக்ரமாகும் இந்த கால கட்டத்தில் சொந்த வீடு, வண்டி வாகனங்கள் வாங்கலாம்.

சக ஊழியர்களால் நன்மைகள் அதிகம் நடைபெறும். வேலை செய்யும் இடத்தில் சில வில்லங்கம் எட்டிப்பார்க்கும் கவனம் தேவை.

படிப்புக்காக குழந்தைகளை விட்டு பிரியும் காலம் இது. குழந்தைகளால் சுப விரையம் ஏற்படும். சனிபகவானை சனிக்கிழமைகளில் எள் தீபம் ஏற்றி வணங்கலாம்.

துலாம்

பூர்வ புண்ணிய சனியால் சில சங்கடங்களை சந்தித்த உங்களுக்கு சில மாதங்கள் நிம்மதி கிடைக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். உல்லாச பயணங்களினால் உற்சாகம் அடைவீர்கள்.

வேலை செய்யும் இடத்தில் உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும்.

சுய தொழில் செய்பவர்களுக்கு லாபம் அதிகம் கிடைக்கும். உடன் பிறந்தவர்களால் நன்மைகள் நடைபெறும். உறவினர்களால் இருந்து வந்த உபத்திரவங்கள் நீங்கும். சின்னச்சின்ன மனக்கசப்புகள் நீங்கி குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும்.

விருச்சிகம்

அர்த்தாஷ்டம சனியால் ஆட்டிப்படைக்கப்பட்டிருந்த நீங்கள் இந்த நான்கு மாத காலத்தில் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆக இருப்பீர்கள். கொடுத்த பணம் வராது என்று நினைத்த நிலையில் உங்களுக்கு வந்து சேரும். கணவன் மனைவி உறவு மகிழ்ச்சிகரமானதாக இருக்கும்.

பணப்புழக்கம் தாராளமாக இருக்கும் தடைபட்டு வந்த சுபகாரியங்கள் நடைபெறும். சிலருக்கு படிப்பு, வேலைக்காக வெளியூர் வெளிநாடு செல்லும் யோகம் அமையும். பாஸ்போர்ட் , விசா கிடைக்கும். காதல் விவகாரங்களால் மனதில் மகிழ்ச்சியும் உற்சாகமும் அதிகரிக்கும்.

தனுசு

கடன் கொடுத்து பணத்தை தராமல் இழுத்தடித்தவர்கள் பணத்தை தேடி வந்து கொடுப்பார்கள். எதிர்பாராத பணவரவு மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். புதிய முயற்சிகளில் தடைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது கவனம் தேவை. உடல் உழைப்பு கூடும்.

வண்டி வாகனங்களில் செல்லும் போது கவனமும் எச்சரிக்கையும் தேவை. காதலிப்பவர்களுக்கு இது கொஞ்சம் கஷ்ட காலம்தான்.

தடைகளை தாண்டி முன்னேறுவீர்கள். வியாழக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாற்றி வழிபட நன்மைகள் நடைபெறும்.

மகரம்

ஏழரை சனியில் பாத சனி நடைபெறுகிறது. உடல் நிலையில் பாதிப்பு அதிகம் இருந்தது. இந்த நான்கு மாத காலம் உடல் நிலைபாதிப்புகள் சற்று குறைய வாய்ப்பு உள்ளது.

தொழில் வியாபாரத்தில் தேவையற்ற முதலீடுகளை தவிர்க்கவும். வேலைகளில் இழுபறி ஏற்படும்.

வேலை செய்யும் இடத்தில் சிறு பிரச்சினைகள் ஏற்படும் அவசரப்பட்டு வேலையை விட்டு விட வேண்டாம். அம்மாவின் உடல் நலனில் அக்கறை செலுத்துங்கள். தேவையற்ற விசயங்களில் தேவையில்லாமல் மூக்கை நுழைக்க வேண்டாம்.

கும்பம்

தலைமேல் சனி அமர்ந்தது. ஜென்ம சனி காலம் நெருக்கடி மிகுந்த கால கட்டங்களை எல்லாம் தாண்டி வந்திருப்பீர்கள். உறவினர்கள், நண்பர்களுடன் இதுநாள் வரை இருந்து வந்த மனவருத்தங்கள் நீங்கும்.புதிய சொத்துக்கள், வண்டி வாகனங்கள் வாங்குவீர்கள்.

பெண்கள் ஆடைகள், பொன் நகைகள் வாங்குவீர்கள். அடிக்கடி வெளியூர் பயணம் ஏற்படும். மாணவர்களுக்கு நல்ல கல்லூரி, பல்கலைக்கழகங்களில் படிக்க வாய்ப்பு அமையும். பிள்ளைகளுக்கு திருமணம் கை வரும்.

மீனம்

ஏழரை சனி தொடங்கியுள்ளது. மனதில் மகிழ்ச்சியும் உற்சாகமும் ஏற்படும் அரசு வழியில் நன்மைகள் நடைபெறும். பணவரவு அதிகரிக்கும் கூடவே செலவுகளும் எட்டிப்பார்க்கும். விரைய செலவுகளை தவிர்த்து சுப செலவுகளாக மாற்றுங்கள்.

திருமணம் நடைபெறாதவர்களுக்கு திருமணம் நடைபெறும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வணங்குங்கள்.   

15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி, கம்பஹா வத்தளை

14 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், குப்பிளான், பேர்ண், Switzerland

18 Dec, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, உரும்பிராய்

16 Dec, 2023
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

15 Dec, 2020
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மருதனாமடம்

14 Dec, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், நயினாதீவு 2ம் வட்டாரம், கோண்டாவில், Toronto, Canada, Montreal, Canada, London, United Kingdom

04 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, கொல்லங்கலட்டி, Jaffna, யாழ்ப்பாணம், Markham, Canada

12 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US