6 வருடமாக புற்றுநோயுடன் போராட்டம் - தடையை மீறி UPSC தேர்வில் சாதித்த சஞ்சய்
6 வருடமாக புற்றுநோயுடன் போராட்டம் நடத்திய சஞ்சய் தஹாரியா தனது 2வது முயற்சியில் UPSC தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
6 வருடமாக புற்றுநோயுடன் போராட்டம்
2025 ஆம் ஆண்டுக்கான UPSC சிவில் சர்விசஸ் தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியானதில் நாடு முழுவதும் 958 பேர் தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.
சத்தீஸ்கராய் சேர்ந்த சஞ்சய் தஹாரியா, அகில இந்திய அளவில் 946வது இடம் பெற்று சாதித்துள்ளார்.
சத்தீஸ்கரின் மகாசமுந்த் மாவட்டத்தில் உள்ள பெல்டுக்ரி கிராமத்தில் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்த சஞ்சய் தஹாரியா தனது பள்ளிப்படிப்பில் சிறந்து விளங்கினார்.

தனது கிராமத்தில் 5 ஆம் வகுப்பு முடித்த பிறகு, தலைநகர் ராய்ப்பூரில் உள்ள ஜவஹர் நவோதயா வித்யாலயாவில் (JNV) நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்று அங்கு தனது படிப்பை தொடர்ந்தார்.
அப்போது பள்ளியின் தலைவராக இருந்த IAS அதிகாரியால் ஈர்க்கப்பட்ட சஞ்சய் தானும் அதே போல் IAS அதிகாரியாக வேண்டும் என கனவு கண்டார்.
பட்டப்படிப்பை முடித்த பிறகு அவர் 2 ஆண்டுகள் கொல்கத்தாவில் உள்ள வங்கி ஒன்றில் பணியாற்றி கொண்டே UPSC தேர்வுக்கு தயாராகியுள்ளார்.
2011 ஆம் ஆண்டில் அவருக்கு 23 வயதில், முகத்தின் வலது பக்கத்தில் ஏற்பட்ட வீக்கதையடுத்து பயாப்ஸி சோதனை செய்தார். அதில் அவருக்கு உமிழ்நீர் சுரப்பியில் பரோடிட் புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து அவருக்கு 2 அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அந்த உமிழ்நீர் சுரப்பி அகற்றப்பட்டது. அதன் பின்னர் அந்த பக்கவிளைவுகளை சரி செய்ய கூடுதலாக 2 அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டது.
இந்த அறுவை சிகிச்சைகளின் விளைவாக அவரது முகத்தின் வலது பக்கத்தில் பக்கவாதம் ஏற்பட்டது. மேலும், அவரின் காதுகளில் தண்ணீர் ஓடுவது போன்ற சத்தம் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தது.
இந்த 8ஆண்டுகளில் 28 சுழற்சி கதிர்வீச்சு சிகிச்சையை மேற்கொண்டார். இது எதுவும் அவரது UPSC பயணத்தை தடை செய்ய முடியவில்லை.
UPSC தேர்ச்சி
இந்த மருத்துவ சிகிச்சைகளுக்கு ரூ.15 லட்சம் செலவான நிலையில், அதனை ஈடு செய்ய வங்கி மற்றும் தபால் அலுவலகத்தில் பணியாற்றியுள்ளார்.
2022 ஆம் ஆண்டு UPSC தேர்வுக்கு முழுமூச்சாக தயாராக திட்டமிட்ட அவர் தனது வேலையை ராஜினாமா செய்து விட்டு 4 ஆண்டுகளாக நாலந்தா பல்கலைக்கழகத்தில் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை படித்துள்ளார்.
2023 ஆம் ஆண்டில் தனது முதல் முயற்சியில் தோல்வியடைந்த அவர், 2025 ஆம் ஆண்டில், தனது இரண்டாவது முயற்சியில், 946வது இடம் பிடித்து தேர்ச்சி பெற்றுள்ளார்.
இந்த தரவரிசையில் இந்திய வருவாய் சேவை (IRS) பணி நியமனம் உறுதி செய்யப்பட்டாலும், இடஒதுக்கீடு நிலை மற்றும் மருத்துவ தளர்வு காரணமாக IAS பணி நியமனம் கிடைக்க வாய்ப்புள்ளது. எந்த பனி கிடைத்தாலும் நாட்டுக்காக சேவையாற்றுவேன்" என தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |