இலங்கை தொடரில் கஷ்டப் பட்ட இளம் வீரர் இவர் தான்! அதிருப்தியில் இருப்பார்: டிராவிட் வெளிப்படை பேட்டி
இலங்கை அணிக்கெதிரான தொடரில், கஷ்டப்பட்ட வீரர் யார் என்பது குறித்து இந்திய அணியின் பயிற்சியாளர் டிராவிட் கூறியுள்ளார்.
இலங்கை அணிக்கெதிரான தொடரில் கலந்து கொண்ட இந்திய அணிக்கு பயிற்சியாளராக ராகுல் டிராவிட் இருந்தார். இவர் தலைமையிலான இந்திய அணி ஒருநாள் தொடரை வென்று டி20 தொடரை கோட்டை விட்டது.
இருப்பினும் இளம் அணியை வைத்து இந்த அளவிற்கு விளையாடியதே பெரிய விஷயம் என்று டிராவிட்ட்ற்கு ஆதரவு ஒரு பக்கம் பெருகி வருகிறது. இந்நிலையில், டிராவி இலங்கை தொடரில் மிகவும் கஷ்டப்பட்ட வீரர் யார் என்பது குறித்து பேசியுள்ளார்.
அதில், இலங்கை மைதானத்தில் பேட்டிங் செய்வது அவ்வளவு எளிது அல்ல. ஒரு நாள் போட்டியில் சிறப்பாக விளையாடிய சஞ்சு சாம்சன் டி20 தொடரில் மைதானத்தில் இருந்த சவால் காரணமாக சிறப்பாக விளையாட முடியாமல் போனது.
இந்த தொடரானது அவருக்கு நிச்சயம் அதிர்ப்தி அளித்திருக்கும் அது மட்டுமில்லாமல் இன்னும் சில வீரர்களுக்கும் இந்த தொடர் சற்று ஏமாற்றத்தை தந்து இருக்கும்.
இருந்தாலும் இளம் வீரர்களாக இருக்கும் நீங்கள் இது போன்ற சூழ்நிலைகள் எல்லாம் கடந்து வர வேண்டும். அதற்கு பொறுமை என்பது மிகவும் அவசியம் எனவே இந்த விடயத்தில் பொறுமையாக இருந்து மீண்டும் தங்களது திறமையை நிரூபிக்க இளம் வீரர்கள் தயாராக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.