சிறுமி கொலை வழக்கில் சித்தியை சரணடைய உறவினர் வற்புறுத்தல்: வெளியாகியுள்ள புதிய தகவல்கள்
பிரித்தானியாவில் பாகிஸ்தான் வம்சாவளியினரான சிறுமி ஒருத்தி சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட வழக்கில், அந்தச் சிறுமியின் சித்தியை பொலிசில் சரணடையுமாறு வற்புறுத்தியுள்ளார் அவரது உறவினர் ஒருவர்.
சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சிறுமி
ஆகத்து மாதம் 10ஆம் திகதி, இங்கிலாந்திலுள்ள Woking என்னுமிடத்தில் அமைந்துள்ள வீடு ஒன்றில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டாள் சாரா (Sara Sharif, 10) என்னும் சிறுமி.
உடற்கூறு ஆய்வில், அவளது உடலிலிருந்த காயங்கள், நீண்ட நாட்களாக அவள் தாக்கப்பட்டுவந்ததை உறுதி செய்தன. ஆனாலும், அவள் எதனால் மரணமடைந்தாள் என்பது தெரியவரவில்லை.
சாராவின் உடல் கண்டெடுக்கப்படுவதற்கு முந்தைய தினம், சாராவின் தந்தையான ஷெரீஃப் (Urfan Sharif) அவரது இரண்டாவது மனைவியான பட்டூல் (Beinash Batool) மற்றும் ஷெரீஃபின் சகோதரரான மாலிக் (Faisal Shahzad Malik) ஆகியோர், தம்பதியரின் ஐந்து பிள்ளைகளுடன் பாகிஸ்தானுக்குத் தப்பிச் சென்றுள்ளார்கள்.
அவர்களை பொலிசார் தேடி வருகிறார்கள். சாரா, ஷெரீஃபின் முதல் மனைவியான ஓல்கா (Olga Sharif)க்கு பிறந்தவர் ஆவார்.
வெளியாகியுள்ள புதிய தகவல்கள்
இந்நிலையில், சாராவின் சித்தியான பட்டூலை பொலிசில் சரணடையுமாறு வற்புறுத்தியுள்ள அவரது உறவினர் ஒருவர், பட்டூலைக் குறித்த பல தகவல்களை வெளியிட்டுள்ளார்.
பாகிஸ்தானிலுள்ள குஜராத்தைச் சேர்ந்தவரான பட்டூலின் அந்த உறவினர், பட்டூல் ஷெரீஃபைத் திருமணம் செய்வதற்காக வீட்டை விட்டு ஓடிவந்துவிட்டதாகவும், ஆகவே, அவருக்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமுல் இல்லை என அவரது பெற்றோர் பட்டூலுனடான உறவை முறித்துக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
பட்டூல் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர், சாரா மரணம் தொடர்பில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளிப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |