பிரித்தானிய சிறுமி கொலை வழக்கில் புதிய திருப்பம்: அதிகாரிகள் வெளியிட்ட முக்கிய தகவல்
பிரித்தானிய சிறுமி கொலை வழக்கில் முக்கிய திருப்பமாக, நாட்டை விட்டு வெளியேறிய சிறுமியின் தந்தையை நெருங்கி விட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெருங்கி விட்டதாக பாகிஸ்தான் பொலிசார்
சிறுமியின் சடலம் மீட்கப்படுவதற்கும் சில மணி நேரம் முன்னர் அவரது தந்தை உட்பட உறவினர்கள் மூவர் மற்றும் 5 சிறார்கள் பிரித்தானியாவை விட்டு வெளியேறியுள்ளனர்.
Credit: thesun
இந்த நிலையில் சிறுமி சாரா ஷெரீப்பின் தந்தை உர்ஃபான் ஷெரீபை நெருங்கி விட்டதாக பாகிஸ்தான் பொலிசார் தெரிவித்துள்ளனர். உர்ஃபான் ஷெரீப் மற்றும் அவரது துணைவி பெய்னாஷ் படூல் மற்றும் சாராவின் மாமா பைசல் மாலிக் ஆகியோர் பிரித்தானியாவில் இருந்து பாகிஸ்தான் தப்பியிருந்தனர்.
இந்த விவகாரத்தில் ராவல்பிண்டி பிராந்திய காவல்துறை தலைவர் குர்ரம் அலி தெரிவிக்கையில், தங்களால் இயன்ற அனைத்து முயற்சிகளும் முன்னெடுக்கப்படுவதாகவும், உர்ஃபான் ஷெரீப் தலைமறைவாக இருக்கும் பகுதியை நெருங்கிவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
10 வயதேயான சிறுமி கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளது பொறுக்கமுடியாத செயல் என தெரிவித்துள்ள அவர், தொடர்புடைய மூவரையும் தாங்கள் விசாரிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
ஒப்படைப்பு ஒப்பந்தம் இல்லை
இதனிடையே, சிறுமி கொலை வழக்கில் அந்த மூவரையும் விசாரணை நிமித்தம் பிரித்தானியாவுக்கு அழைத்துவருவது என்பது சிக்கலான விடயமாகவே பார்க்கப்படுகிறது. இங்கிலாந்துக்கு பாகிஸ்தானுடன் முறையான ஒப்படைப்பு ஒப்பந்தம் இல்லை என்பதே காரணமாக கூறப்படுகிறது.
Credit: Collect
சிறுமி சாராவின் உடல் சரியாக இரண்டு வாரங்களுக்கு முன்பு சர்ரே, ஹார்செல்லில் உள்ள அவரது வீட்டில் கண்டெடுக்கப்பட்டது. இதனையடுத்து பொலிசார் கொலை வழக்கு விசாரணையை முன்னெடுத்தனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |