வயது என்பது வெறும் எண் மட்டுமே: 33 வயதில் இலங்கைக்கு எதிரான டெஸ்டில் களமிறங்கும் வீரர்
இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ள சரன்ஷ் ஜெயின், களத்தில் வயது தடையில்லை என தெரிவித்துள்ளார்.
சரன்ஷ் ஜெயின்
இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் விளையாட சரன்ஷ் ஜெயின் 33 வயதில் இடம்பிடித்துள்ளார்.
மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சரன்ஷ் ஜெயின் (Saransh Jain) 28 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வயதில் இந்திய அணியில் இடம்பிடித்த வீரர் என்ற பெருமையை பெற உள்ளார்.
வயது ஒரு தடையாகவோ
இந்திய அணியில் இடம்பெற்றது குறித்து பேசிய சரன்ஷ் ஜெயின், "வயது என்பது வெறும் ஒரு எண் மட்டுமே; இன்றைய காலகட்டத்தில் களத்தடுப்பு (fielding) தரநிலைகள் மிக உயர்ந்த நிலையில் இருப்பதால், 33 வயதும் வெறும் ஒரு எண்ணாகவே கருதப்படுகிறது.
அதாவது களத்தில் உங்கள் வயது ஒரு தடையாகவோ அல்லது வெளிப்படையாகவோ தெரிவதில்லை.
ஒருவேளை இன்று இந்திய அணியில் எனக்கு இடம் கிடைக்காமல் போயிருந்தாலும், அடுத்த ஓராண்டு அல்லது இரண்டாண்டுகளுக்குள் நான் அதில் இடம்பிடித்திருப்பேன் என்று எனக்குத் தெரியும்.
ஆனால், நான் நிச்சயம் அணியில் இடம்பெறுவேன் என்பதில் எனக்கு உறுதியான நம்பிக்கை இருந்தது" என தெரிவித்தார்.


| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |