விரைவில் ஜெயலலிதா சமாதியில் சசிகலா? வெளியான ரகசியம்
விரைவில் ஜெயலலிதா சமாதிக்கு செல்லும் சசிகலா தொண்டர்கள் துணையுடன் அதிமுக கட்சியை மீட்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிமுக தொண்டர்களுடன் தொடர்ந்து சசிகலா தொலைபேசியில் பேசி வருகிறார்.
சென்னையைச் சேர்ந்த புவனேந்திரன், விருதுநகரைச் சேர்ந்த குரு ராமச்சந்திரன், திருப்பூரைச் சேர்ந்த சமரசன், ராமநாபுரத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி, ஈரோட்டைச் சேர்ந்த கோபால், மற்றும் பண்ருட்டியைச் சேர்ந்த உத்திரவேல் ஆகியோருடன் நேற்று தொலைபேசியில் பேசினார்.
இந்த ஆடியோ பதிவுகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திவரும் நிலையில், அவர்களை கட்சியிலிருந்து நீக்கி வருகின்றனர்.
இருப்பினும் அதைகண்டு கொள்ளாத தொண்டர்கள், பல இடங்களில் தீர்மானங்களை நிறைவேற்றி வருகின்றனர்.
இந்நிலையில் விரைவில் ஜெயலலிதா சமாதிக்கு செல்லும் சசிகலா, தொண்டர்கள் துணையுடன் அதிமுக கட்சியை கைப்பற்றி திட்டமிட்டு வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன.