ஓ.பி.எஸ் கைகளைப் பிடித்தபடி ஆறுதல் கூறிய சசிகலா! 4 ஆண்டுகளுக்குப்பின் நேரில் சந்தித்த உருக்கமான தருணம்
அதிமுக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி மறைவுக்கு சசிகலா நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.
தமிழக முன்னாள் முதல்வர் மற்றும் அஇஅதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி (66) இன்று காலை 6.45 மணியளிவில் தீவிர மாரடைப்பு காரணமாக இயற்கையெய்தினார்.
உடல்நலகை்குறைவால் கடந்த பத்துத்தினங்களாக சென்னை ஜெம் மருத்துவமனையில் சிகிக்சைப்பெற்று வந்த விஜயலட்சுமி, உடல்நலமைந்து மருத்துவமனையிலிருந்து இன்று தான் வீடு திரும்பிய நிலையில் இத்துயர சம்பவம் நடந்துள்ளது.
மறைவுச்செய்தி அறிந்து, ஜெம் மருத்துவமனைக்கு நேரில் வந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன் உட்பட திமுக-வினர் ஓபிஎஸ்-ஐ நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.
இதைத்தொடர்ந்து, அதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் சசிகலா, ஜெம் மருத்துவமனைக்கு நேரில் சென்று பன்னீர்செல்வத்திற்கு ஆறுதல் கூறியுள்ளார்.
மனைவியின் மறைவால் கண்கலங்கிய பன்னீர்செல்வத்தின் கையை பிடித்து சசிகலா ஆறுதல் கூறினார்.
4.6 ஆண்டுகள் கழித்து ஓ.பன்னீர் செல்வத்தை சசிகலா சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.