சசிகலாவின் அடுத்தகட்ட திட்டம்! எதிர்கட்சி அதிமுக பயப்படுகிறது... உடைத்து பேசும் அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் வீடியோ
திமுக அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குகள் நிலுவையில் இருந்தும் அது குறித்து எதிர்கட்சியான அதிமுக பேசாமல் இருப்பதற்கு காரணம் பயம் தான் என சவுக்கு சங்கர் கூறியுள்ளார்.
பிரபல அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் அளித்துள்ள பேட்டியில், மறைந்த ஜெயலலிதா எதிர்கட்சி தலைவராக இருந்த போது திமுகவின் 1996 மற்றும் 2006 ஆட்சியை தொடர்ந்து விமர்சித்தார். திமுக எது செய்தாலும் அதை விமர்சிப்பார், ஆனால் தற்போது திமுக ஆட்சி பொறுப்பேற்று 6 மாதங்கள் ஆகியும் எதிர்கட்சியான அதிமுக எந்தவொரு விமர்சனங்களையும் வைக்கவில்லை.
திமுக அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குகள் நிலுவையில் இருந்தும் அது குறித்து எதிர்கட்சியான அதிமுக பேசாமல் இருப்பதற்கு காரணம் பயம் தான். ஏனெனில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது மேலும் புதிதாக வழக்கு தொடுப்பார்கள் என அவர்கள் அஞ்சுகின்றனர்.
அதே சமயம் தமிழகத்தில் எதிர்ப்பு அரசியல் தான் எடுபடும் என்பதை சசிகலா புரிந்து வைத்துள்ளார், இதையடுத்தே திமுக நமது பொது எதிரி என அதிமுகவுடன் இணைய தொடர்ந்து பேசி வருகிறார்.
சசிகலா விரைவில் தமிழகத்தில் சுற்றுபயணம் செய்து அதிமுக தொண்டர்களை சந்தித்து பொதுகூட்டத்தில் பேசுவார், அதில் அவருக்கு எந்தளவுக்கு வரவேற்பு கிடைக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என கூறியுள்ளார்.
சவுக்கு சங்கரின் முழு பேட்டியின் வீடியோ கீழே,