கடுமையான நெருக்கடி கொடுத்த வங்காளதேசம்: த்ரில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்க அணி
மகளிர் உலகக்கிண்ணப் போட்டியில், தென் ஆப்பிரிக்க அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தியது.
சோபனா 42 ஓட்டங்கள்
வங்காளதேசம் மற்றும் தென் ஆப்பிரிக்கா மகளிர் அணிகள் மோதிய போட்டி லண்டன் லார்ட்ஸில் நடந்தது.
முதலில் ஆடிய வங்காளதேசம் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 117 ஓட்டங்கள் எடுத்தது. சோபனா மோஸ்தரி 42 ஓட்டங்களும், நிகர் சுல்தானா 32 (20) ஓட்டங்களும், ஷர்மின் அக்தர் 22 ஓட்டங்களும் எடுத்தனர்.

பின்னர் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி ஓட்டங்கள் எடுக்க தடுமாறியது. நிதானமாக ஆடிய அன்னேரி டெர்க்ஸன் 45 ஓட்டங்கள் எடுத்தார்.
கடைசி ஓவரில் த்ரில் வெற்றி
அணி 102 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகள் என தடுமாறியபோது, நாடினே டி க்ளெர்க் 2 பவுண்டரிகளை விரட்டினார்.
கடைசி ஓவரில் வெற்றிக்கு 5 ஓட்டங்கள் தேவைப்பட, ட்ரியோன் பவுண்டரி அடித்தும், ஒரு ரன் ஓடியும் அணியை வெற்றி பெற வைத்தார்.
தோல்வியால் வங்காளதேச அணி தொடரை விட்டு வெளியயேறியது. மரிசன்னே கப் ஆட்டநாயகி விருது பெற்றார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |