கரூர் அரசு வேலை ரத்து - உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை
karur government job case: கரூரில் வழங்கப்பட்ட அரசு வேலை செல்லாது என்ற உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை
கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் திகதி கரூரில் நடைபெற்ற தவெக பொதுக்கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
கடந்த ஜூலை 10 ஆம் திகதி கரூர் சென்ற முதல்வர் விஜய், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தை சேர்ந்த 32 பேருக்கு அரசுப்பணிக்கான ஆணையை வழங்கினார்.

இதற்கு தடை விதிக்க கோரி, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கில், கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்குவதற்கு உச்ச நீதிமன்றம் வகுத்துள்ள விதிகளை தமிழ்நாடு அரசு மீறியுள்ளது.
எனவே கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கியது செல்லாது என தீர்ப்பளித்தது
உச்சநீதிமன்றம் இடைக்கால தடை
இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், "அரசின் கொள்கை முடிவில் உயர்நீதிமன்றம் எப்படி தலையிட முடியும்? உயிரிழந்தவர்களுக்கு அரசு வேலை வழங்குகிறது. வழங்க கூடாது என சொல்வதற்கு நீங்கள் யார்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும், "உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் வேலை செய்தவர் ஒரே நபர் என்றால் குடும்பமே பாதிக்கப்படும். அப்படி இருக்கும் போது அரசுப்பணி வழங்குவதில் என்ன தவறு உள்ளது? என கேள்வி எழுப்பியுள்ளனர்
இதனையடுத்து, அரசு வேலை வழங்கியது செல்லாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை வழங்கிய தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |