பிரித்தானிய பள்ளி ஒன்றில் பயங்கரமாக பரவும் பழங்கால நோய்த்தொற்று கண்டுபிடிப்பு: மருத்துவர்கள் எச்சரிக்கை
முற்றிலும் ஒழித்துக்கட்டப்பட்டுவிட்டதாக மருத்துவ உலகம் நம்பிக்கொண்டிருக்கும் சில நோய்கள் அவ்வப்போது தலைகாட்டத் துவங்கியுள்ளன.
அதுவும், மருத்துவ உலகின் இவ்வளவு முன்னேற்றம் கண்ட பிரித்தானியாவிலேயே அந்த நோய்கள் மீண்டும் கண்டுபிடிக்கப்படுவதுதான் ஆச்சரியம்!
பெண் நோய் என அழைக்கப்படும் சிபிலிஸ், சமுதாயத்தின் கீழ் நிலையில் வாழ்பவர்களை தாக்கும் நோய் என கருதப்படும் காசநோய் போன்ற நோய்களுடன், தற்போது, டிப்தீரியா என்னும் பழங்கால நோய்த்தொற்று தலைகாட்டத் துவங்கியுள்ளது.
இங்கிலாந்து பள்ளி ஒன்றில் கண்டுபிடிப்பு
இங்கிலாந்திலுள்ள Luton என்னுமிடத்தில் அமைந்துள்ள ஆரம்பப் பள்ளி ஒன்றில் பயிலும் மாணவர் ஒருவருக்கு இந்த டிப்தீரியா என்னும் பழங்கால நோய் தொற்றியுள்ளது தெரியவந்துள்ளது.
உலக நாடுகளில் பெரும்பாலானவற்றில் தற்போது இந்த டிப்தீரியா முதலான நோய்களைத் தவிர்க்கும் வகையில், குழந்தைகளுக்கு DPT (diphtheria, pertussis, and tetanus)என்னும் முத்தடுப்பு ஊசி வழங்கப்பட்டுவருகிறது.
ஆகவே, பெரும்பாலான குழந்தைகள் இந்த நோய்களுக்கு எதிர்ப்பு சக்தி உடையவர்களாகவே இருப்பார்கள். ஆகவே, அந்த மாணவருக்கு எப்படி அந்த நோய் வந்தது என்பது குறித்து ஆராய்ந்துவரும் அறிவியலாளர்கள், அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்கள்.
எச்சரிக்கை
அந்த மாணவருக்கு டிப்தீரியா தொற்று கண்டுபிடிக்கபட்டது குறித்து பெற்றோர்களுக்கு தெரியப்படுத்தியுள்ள அதிகாரிகள், யாருக்காவது இந்த நோய்க்கான அறிகுறிகள் தெரிந்தால் உடனடியாக சிகிச்சை பெறுமாறு வலியுறுத்தியுள்ளார்கள்.
யாராவது முறையாக முழுமையான தடுப்பூசி பெறவில்லையானால், தடுப்பூசி எடுத்துக்கொள்ளுமாறும், இந்த நோய் பரவலைத் தடுக்க அதுவே சரியான நடவடிக்கை என்றும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள்.
பயங்கரமாக பரவக்கூடிய தொற்றுநோயான டிப்தீரியா, ஒரு காலத்தில் குழந்தைகளின் உயிரிழப்புக்கு முக்கிய காரணமாக அமைந்த ஒரு நோயாகும். ஆனால், 1940களிலிருந்து அதற்கெதிரான தடுப்பூசி வழங்கப்பட்டு வருவதால், தற்போது அது அபூர்வமாகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |