பிரித்தானியாவில் இஸ்லாமிய மாணவர்களுக்கு நடந்தது என்ன? வைரலாகும் வீடியோ: மன்னிப்பு கேட்ட பள்ளி நிர்வாகம்
பிரித்தானியாவில் கடும் குளிரில் பள்ளி ஒன்றில் மாணவர்கள் வெளியே நின்று தொழுகை செய்த வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையான நிலையில், அதற்கு பள்ளி நிர்வாகம் மன்னிப்பு கேட்டுள்ளது.
பிரித்தானியாவின் Oldham நகரில் உள்ள Oldham Academy North பள்ளியில், இஸ்லாமிய மாணவர்கள் சிலர் பள்ளிக்கு வெளியே நின்று கடும் குளிரில் தொழுகை செய்வது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் கடந்த வாரம் சமூகவலைத்தளங்களில் தீவிரமாக பகிரப்பட்டு வந்தது.
பள்ளியின் இந்த செயல் மிகவும் மோசமானது, அருவருக்கதக்கது என்று பலரும் குறித்த பள்ளி நிர்வாகத்தை குற்றம் சாட்டினர். இது பெற்றோர்களிடையே கடும் கோபத்தையும் தூண்டியது.
இந்நிலையில், குறித்த பள்ளி நிர்வாகம் Oldham Council மற்றும் Oldham Interfaith Forum(சர்வதேச மன்றம்) உடன் இணைத்து அறிக்கை ஒன்றை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், இந்த வார துவக்கத்தில், Oldham Academy North பள்ளி மாணவர்கள் வெளியே பிரார்த்தனை செய்யும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவத் தொடங்கின. இது மக்களிடையே எவ்வளவு பெரிய கவலையை ஏற்படுத்தியுள்ளது என்பதை எங்களால் புரிந்து கொள்ள முடிகிறது.
முதலாவதாக இதற்கு Oldham Academy North பள்ளி மன்னிப்பு கேட்டு கொள்ள விரும்புகிறது. பள்ளி ஒருபோதும் மாணவர்களை வெளியே சென்று பிரார்த்தனை செய்யும் படி கூறியது கிடையாது.
சமீபத்தில் Oldham நகரில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக, பள்ளியில் இருந்த 15 அறைகள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. தற்போது மாணவர்களுக்கு பிரார்த்தனை செய்வதற்காக ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
Oldham Council தலைவர் Arooj Shah இது குறித்து கூறுகையில், இந்த சம்பவம் குறித்து பள்ளியுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், அவர்கள் விசாரணைக்கு ஒத்துழைப்பதாக கூறியுள்ளனர்.
இந்த விஷயம் தெரிந்தவுடன் அவர்களிடம் நாங்கள் பேசினோம். அப்போது பள்ளி தலைவர்கள் பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்க தயாராக இருக்கிறோம் என்றனர், அவர்கள் மன்னிப்பு கேட்டதில் மிகுந்த மகிழ்ச்சி, இது குறித்து அவர்கள் பெற்றோர்களுக்கு ஒரு தெளிவான கடிதம் எழுதி அனுப்பவர் என்று கூறியுள்ளார்.
Oldham-ல் கடந்த வாரம் ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாக கடும் புயல் மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் தற்போது அங்கிருக்கும் பல பகுதிகளில் மின்வெட்டு பிரச்சனை தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.