பள்ளிக்கூட சீருடையுடன் வீட்டில் இருந்து வெளியில் சென்றாள்! 14 வயது லண்டன் மாணவி தொடர்பில் புகைப்படத்துடன் முக்கிய தகவல்
லண்டனில் காணாமல் போன 14 வயது மாணவி தொடர்பில் பொலிசார் முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
லண்டனின் பெக்ஹமில் உள்ள வீட்டில் இருந்து 14 வயது பள்ளி மாணவி ஷெனான் ரெய்ட் கடந்த 11ஆம் திகதி கிளம்பி சென்றுள்ளார்.
இதன் பின்னர் ஷெனான் காணாமல் போயுள்ளார். அவர் வெளியில் செல்லும் போது பள்ளி சீருடை அணிந்திருந்தார் என தெரிவித்துள்ள பொலிசார் அந்த உடையில் தான் அவர் கடைசியாக காணப்பட்டார் எனவும் தெரிவித்துள்ளனர்.
அவரின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ள நிலையில் அதில் இறுக்கமான முகபாவனையுடன் காணப்படுவது தெரிகிறது.
பொலிசார் ஷெனானின் தற்போதைய நிலை மற்றும் பாதுகாப்பு குறித்து கவலை கொண்டுள்ளனர்.
அவர் குறித்து யாருக்கேனும் தகவல் தெரிந்தால் உடனே தங்களிடம் கூறலாம் என பொலிசார் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.