பாடசாலைகளுக்கு தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு விடுமுறை - வெளியான அறிவிப்பு
இலங்கையில் தற்போது சீரற்ற காலநிலை நிலவி வருவதால் நாளையும் குறிப்பிட்ட ஒரு சில மாவட்டங்களில் அமைந்துள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு
நாட்டில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக நேற்றைய தினம் கல்வி அமைச்சு தெரிவித்திருந்தது.
நாட்டில் நிலவும் கடும் மழையுடனான வானிலை காரணமாக குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.
குறித்த தகவலை கல்வி இராஜாங்க அமைச்சர் அ. அரவிந்தகுமார் (A.Aravind Kumar) தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தொடர்ந்து சீரற்ற காலநிலை நிலவி வருவதால், நாளை (04) மற்றும் நாளை மறுதினம் (05) காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
தென் மாகாண ஆளுநர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன கல்வி அதிகாரிகளுடன் நடத்திய கலந்துரையாடலின் போது இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |