தமிழக பள்ளிகளுக்கு 12 நாட்கள் தொடர் விடுமுறை- பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு அரையாண்டுத் தேர்வு விடுமுறை தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பள்ளிகளுக்கான அரையாண்டு விடுமுறை
தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
ஒவ்வொரு ஆண்டும் அரையாண்டுத் தேர்வு முடிந்ததும் வழக்கமாக 9 நாட்கள் மட்டுமே விடுமுறை விடப்படும்.
இந்நிலையில், பள்ளி மாணவர்களுக்கு டிசம்பர் 24 முதல் அரையாண்டு விடுமுறை விடப்படவுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.

10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த 10ஆம் திகதி தேர்வுகள் தொடங்கிய நிலையில், 6 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேற்று முதல் தேர்வுகள் தொடங்கப்பட்டுள்ளன.
அனைத்து வகுப்புகளுக்கான தேர்வுகளும் வரும் 23ஆம் திகதியுடன் முடிவடையவுள்ள நிலையில் விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி மாணவர்களுக்கு 12 நாட்கள் அரையாண்டுத் தேர்வு விடுமுறை விடப்படும் என பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.
அந்தவகையில் டிசம்பர் 24ஆம் தேதி முதல் ஜனவரி 4ஆம் திகதி வரை தொடர் விடுமுறை விடப்படவுள்ளது.
மேலும், விடுமுறை முடிந்து ஜனவரி 5ஆம் திகதி வகுப்புகள் மீண்டும் தொடங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |