நாடளாவிய ரீதியில் தொடரும் கனமழை - பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவித்த மாவட்ட ஆட்சியர்கள்
தென்மேற்கு பருவமழை பெய்து வரும் நிலையில் குறிப்பிட்ட ஒரு சில பகுதிகளில் உள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடரும் கனமழை
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் இன்று கனமழை பெய்வதற்கு வாப்பு அதிகமாக இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யவுள்ளது.
நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் மிக கனமழையும் திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை பெய்யவிருப்பதாகவும் வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை (27) புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழை பெய்யும்.
வருகிற 28 ஆம் திகதி முதல் ஜூலை 01 ஆம் திகதி வரை தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யும்.
இந்நிலையில் ஒரு சில பாடசாலைகளககு கல்லூரிகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுமுறை அறிவித்த மாவட்ட ஆட்சியர்கள்
வால்பாறையில் பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி அறிவித்துள்ளார்.
நேற்று இரவில் இருந்து நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் கூடலூர், பந்தலூர் ஆகிய 2 தாலுக்காக்களிலுள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக நீலகிரி ஆட்சியர் அருணா அறிவித்துள்ளார்.
மேலும் மழையின் தீவிரம் அதிகரித்தால் ஏனைய மாவட்டங்களில் இருக்கும் பாடசாலைகளுக்கு கல்லூரிகளுக்கும் விடுமுறை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |