அம்பலமான பள்ளி ஆசிரியரின் 5 ஆண்டு லீலைகள்! தைரியமாக முன் வந்த மாணவர்
அமெரிக்காவில் 5 ஆண்டுகளாக ஆசிரியரால் மாணவர் ஒருவருக்கு நடந்து கொடுமை தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கலிபோர்னியாவின் ரெட்லாண்ட்ஸில் தான் இச்சம்பவம் அரங்கேறியுள்ளது.
அதன்படி தற்போது 18 வயதான ஆண் மாணவர் ஒருவர் பொலிசில் ஒரு புகாரை சமீபத்தில் தெரிவித்தார். அதில் தான் 12 முதல் 17 வயது இருக்கும் வரையில் பள்ளியில் ஆசிரியராக இருந்த ஜோசப் நார்டெல்லா (52) என்பவர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டார்.
தற்போது அதை வெளியில் தெரிவிக்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து ஜோசப்பை பொலிசார் கைது செய்தனர், அவருக்கு ஜாமீன் தொகையாக $350,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஜோசப் மூலம் மேலும் பலர் பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்புள்ளது என கருதும் பொலிசார் அது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.