லண்டனில் கொல்லப்பட்டு பல மணி நேரம் கழித்து கண்டெடுக்கப்பட்ட 28 வயது பள்ளி ஆசிரியை சடலம்! வெளிவரும் பின்னணி
லண்டனில் கொலை செய்யப்பட்டு 24 மணி நேரத்திற்கு பிறகு இளம்பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அங்குள்ள OneSpace community centre அருகே தான் Sabina Nessa என்ற 28 வயதான பள்ளி ஆசிரியையின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. சடலம் கண்டெடுக்கப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்னரே அவர் கொலை செய்யப்பட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவரை கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் 40களில் உள்ள நபரை பொலிசார் கைது செய்தனர். பின்னர் அவர் விசாரணையின் கீழ் விடுவிக்கப்பட்ட்டார். Sabinaவின் மரணம் அவர் பணியாற்றிய பள்ளி நிர்வாகத்தினர், சக ஆசிரியர்கள், மாணவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அன்பான, அக்கறையுள்ள, பணியில் அர்பணிப்பு கொண்டவராக Sabina இருந்தார் என அவர் பணியாற்றிய பள்ளிக்கூடத்தின் தலைவர் லிசா வில்லியம்ஸ் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
இதனிடையில் Sabinaவின் உடலுக்கு பிரேத பரிசோதனை நடந்த நிலையில் அதன் முடிவு இன்னும் கிடைக்கவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர். டிடெக்டிவ் அதிகாரி ஜோ கேரிட்டி கூறுகையில், சம்பவம் நடந்த இடத்தின் அருகில் யாராவது இருந்திருந்தால், கொலை குறித்து தகவல் தெரிந்தால் தங்களை தொடர்பு கொள்ளலாம்.
யாராவது சந்தேகத்துடன் நடமாடுவதையோ அல்லது செயல்படுவதையோ பார்த்தீர்களா? அல்லது, யாராவது அவசரமாக அந்தப் பகுதியை விட்டு வெளியேறுவதைப் பார்த்தீர்களா? அப்படி பார்த்திருந்தால் நீங்கள் அந்த தகவலை சொல்வது மிக முக்கியம்.
இந்த இளம் பெண்ணின் குடும்பத்திற்கு நீதி வழங்க நாங்கள் தொடர்ந்து போராடுகிறோம், அதற்கு உங்கள் உதவி தேவை என கூறியுள்ளார்.