கரூர் பள்ளி மாணவி தற்கொலை விவகாரத்தில் ஏற்பட்ட திடீர் திருப்பம்! கடிதத்தில் குறிப்பிட்டவர் இவர் தானா?
இந்தியாவில் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் பள்ளி ஆசிரியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் 17 வயது மாணவி நவம்பர் 19ஆம் திகதி மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பியதும் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து மாணவி கைப்பட எழுதிய கடிதம் ஒன்றை காவல்துறையினர் கைப்பற்றினர்.
அந்தக் கடிதத்தில் பாலியல் துன்புறுத்தலால் சாகுற கடைசிப் பொண்ணு நானா தான் இருக்கனும். என்னை யார் இந்த முடிவை எடுக்க வைச்சாங்கன்னு எனக்குச் சொல்ல பயமா இருக்கு என தெரிவித்து இருந்தார்.
இந்த சம்பவத்திற்கு பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மாணவி படித்த பள்ளியின் கணித ஆசிரியர் சரவணன் என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தற்பொழுது ஆசிரியர் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் தொடர்பாக கடிதம் ஒன்று வெளியாகியுள்ளது.
அந்த கடிதத்தில் என்னை மாணவர்கள் அனைவரும் தவறாக நினைக்கிறார்கள் எனக்கு அவமானமாக இருக்கிறது. நான் எந்த தவறும் செய்யவில்லை. நான் மாணவர்களை கோபத்தில் திட்டி இருக்கிறேன்.
அனைவரும் என்னை மன்னித்து விடுங்கள் என கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.