பள்ளிகள் இனி கூடுதலாக 30 நிமிடங்கள் செயல்படும்- அரசின் புதிய உத்தரவு
பள்ளிக்கூடங்கள் இனி அரை மணி நேரம் கூடுதலாக செயல்படும் என கேரளா அரசு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.
கூடுதல் நேரம்
பல்வேறு மாநிலங்களில் தற்போது கோடை விடுமுறை பள்ளிகளுக்கு விடப்பட்டுள்ளது.
இதற்கிடையே, கேரளாவில் வரும் கல்வி ஆண்டுக்கான பள்ளி வகுப்பு நேரங்களை நிர்ணயிக்கும்படி கேரள உயர் நீதிமன்றம் அறிவித்திருந்தது.
அதன்படி, கேரளாவில் பள்ளிகள் இனி அரை மணி நேரம் கூடுதலாக செயல்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கல்வித்துறை அமைச்சர் சிவன் குட்டி இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
வெளியிட்ட அறிவிப்பு..,
இதன்படி, காலையில் 15 நிமிடங்கள் முன்னதாகத் தொடங்கும் வகுப்புகள் மாலையில் 15 நிமிடங்கள் கூடுதலாக நடைபெறும்.
அதாவது, கேரளாவில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலைப் பள்ளிகளில் இந்த கூடுதல் நேரம் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
வரும் கல்வி ஆண்டில் கூடுதல் விடுமுறை நாட்கள் இருப்பதால், அதனை ஈடு கட்டும் விதமாக கூடுதல் நேரம் பள்ளிகள் நடத்தப்படும் என தெரிவித்துள்ளன.
மேலும், வெள்ளிக்கிழமை மட்டும் இந்த கூடுதல் நேரம் இருக்காது என்றும் தெரிவித்துள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |