மிகக்குறைந்த வயதில் இந்திய வம்சாவளி இளம்பெண்ணுக்கு பிரித்தானியா அளித்துள்ள உயரிய கௌரவம்
இந்திய வம்சாவளி இளம்பெண் ஒருவருக்கு, பிரித்தானியா உயரிய விருது ஒன்றை அளித்து கௌரவித்துள்ளது.
அமிகா ஜார்ஜ் (21) என்ற அந்த இளம்பெண்ணின் குடும்பம் கேரளாவைச் சேர்ந்தது. பிரித்தானியாவில் வாழ்ந்தாலும், அமிகா இப்போதும் அடிக்கடி கேரளாவுக்கு சென்று வருவதுண்டு.
தனக்கு 17 வயது இருக்கும்போது, மாதவிடாய் காரணமாக பள்ளிக்கு வரமுடியாமல் போன ஒரு மாணவியின் கதையைக் கேட்டு, ஏழ்மையிலிருக்கும் மாணவிகளுக்கு இலவசமாக மாதவிடாய் கால நாப்கின்களை வழங்கவேண்டும் என குரல் கொடுத்தவர் அமிகா.
தற்போது, அவரது பிரச்சாரத்தை கௌரவிக்கும் வகையில் MBE (Member of the Most Excellent Order of the British Empire) என்னும் பிரித்தானியாவின் உயரிய விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார் அமிகா.
இந்த ஆண்டில் இந்த உயரிய கௌரவத்தைப் பெறும் மிகக் குறைந்த வயதுடையவர் அமிகா என்பது குறிப்பிடத்தக்கது.