சுவிட்சர்லாந்தில் செயற்கை நிலநடுக்கங்கள்: ஒரு சுவாரஸ்ய தகவல்
சுவிட்சர்லாந்தில், அறிவியலாளர்கள் செயற்கையாக நிலநடுக்கங்களை உருவாக்க இருக்கிறார்கள்.
செயற்கை நிலநடுக்கங்கள்
இயற்கை சீற்றங்களைப் பொருத்தவரை, எல்லாவற்றையும் நம்மால் கணிக்கவும் முடியாது, கணித்தாலும் அவற்றை தடுத்து நிறுத்தவும் முடியாது.

தினமும் உலகில் ஆயிரக்கணக்கான நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. அவற்றில் பல சிறிய நிலநடுக்கங்களாக இருப்பதால், அவற்றை உணர முடிவதில்லை.
இந்நிலையில், சுவிட்சர்லாந்தின் Ticino மாகாணத்திலுள்ள Bedretto என்னுமிடத்தில், சுரங்கம் ஒன்றில், செயற்கையாக நிலநடுக்கங்களை உருவாக்க இருக்கிறார்கள் அறிவியலாளர்கள்.
அதாவது, நிலநடுக்கம் ஏற்படுவதற்கு சற்று முன் என்ன நடக்கும், நிலநடுக்கத்தை நிறுத்துவது எது என்பது போன்ற விடயங்களைக் கண்டறிவதற்காக அறிவியலாளர்கள் இந்த ஆய்வை மேற்கொள்ள இருக்கிறார்கள்.
அவர்கள், நிலத்தின் அடியில் அமைந்துள்ள ஒரு சுரங்கத்தில், ரிக்டர் அளவுகோலின்படி 1ஆக அமையும் நிலநடுக்கத்தையே உருவாக்க இருப்பதால், இந்த நிலநடுக்கத்தால் பாதிப்பு எதுவும் ஏற்படாது.
அத்துடன், அவர்கள் நிலநடுக்கத்தை உருவாக்கும்போது, ஆய்வு மேற்கொள்ளப்படும் அந்த சுரங்கத்திற்குள் மனிதர்கள் யாரும் இருக்கப்போவதில்லை. அதாவது, சூரிக்கிலிருந்தவண்ணம், ரிமோட் மூலமாகவே இந்த நிலநடுக்கத்தை அவர்கள் உருவாக்க இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |