பிரித்தானிய கறுப்பின கால்பந்தாட்ட வீரர்களை இனவெறி துஷ்பிரயோகம் செய்த நபருக்கு கொடுக்கப்பட்ட தண்டனை!

Racist Abuse Marcus Rashford Scott McCluskey Euro 2020 Final
By Ragavan Sep 09, 2021 09:29 AM GMT
Report

யூரோ 2020 கால்பந்தாட்ட இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்த காரணத்திற்கான மூன்று பிரித்தானிய கறுப்பின வீரர்களை இனவெறி துஷ்பிரயோகம் செய்த நபர் 14 வாரங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்.

ஸ்காட் மெக்கலஸ்கி (Scott McCluskey) எனும் அந்த 43 வயது நபர், தன செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டதன் அடிப்படையில் அவருக்கு தண்டனை குறைக்கப்பட்டது.

ஜூலை 11-ஆம் திகதி நடைபெற்ற யூரோ 2020 கால்பந்தாட்ட போட்டியின் இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணி இத்தாலிக்கு எதிராக விளையாடியது.

அப்போது, கடைசி நேரத்தில் மார்கஸ் ராஷ்ஃபோர்டு பேனாலிட்டி ஷூட்டவுட்டை தவறவிட்டதன் காரணமாக, கிட்டத்தட்ட 55 ஆண்டுகள் கழித்து இறுதி ஆட்டத்துக்கு முன்னேறிய இங்கிலாந்து அணி வெற்றி வாய்ப்பை இழந்தது. இது ஒட்டுமொத்த பிரித்தானிய கால்பந்தாட்ட ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது.

பிரித்தானிய கறுப்பின கால்பந்தாட்ட வீரர்களை இனவெறி துஷ்பிரயோகம் செய்த நபருக்கு கொடுக்கப்பட்ட தண்டனை! | Scott Mccluskey Spared Jail Racist Abuse Euro 2020

அதேசமயம், சிலர் சமூக இங்கிலாந்து அணியில் இடம்பெற்றிருந்த கறுப்பினத்தவர்களான Marcus Rashford, Jadon Sancho மற்றும் Bukayo Saka ஆகியோரை சுட்டிக்காட்டி இனவெறி தாக்குதலில் ஈடுப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து, அவர்களுக்கு எதிராக சமூக வலைதங்களில் இனரீதியான துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட சுமார் 11 பேர் மீது பொலிஸார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்தனர்.

இந்த நிலையில், ஸ்காட் மெக்கலஸ்கி தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதுடன், இறுதிப்போட்டி நடந்த இரவில், தான் கஞ்சா போதையில் இருந்ததாகவும், மக்களை சிரிக்க வைக்கும் வகையில் இருக்கும் என நினைத்து இந்த கருத்துகளை பதிவிட்டதாகவும் பொலிஸாரிடம் கூறினார்.

மெக்லஸ்கி பேஸ்புக்கில் தனது கருத்துக்கள் இனவெறியாக கருதப்படும் என்று உணரவில்லை என்றும் மற்ற சமூக ஊடக பயனர்களின் பதிலைக் கண்டபின் அவற்றை நீக்கியதாகவும் கூறினார்.

பிரித்தானிய கறுப்பின கால்பந்தாட்ட வீரர்களை இனவெறி துஷ்பிரயோகம் செய்த நபருக்கு கொடுக்கப்பட்ட தண்டனை! | Scott Mccluskey Spared Jail Racist Abuse Euro 2020

இந்தநிலையில், நேற்று அவருக்கு, 14 வாரங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது, 18 மாதங்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டது.

மேலும், மெக்லஸ்கி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 40 வாரங்களுக்கு மின்னணு முறையில் கண்காணிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி, அவர் பாதிக்கப்பட்டவர்களுக்கு 100 பவுண்டுகள் பணத்தை இழப்பீடாகவும், மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என தண்டனையாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அவருக்கு தண்டனை வழங்கிய, மாவட்ட நீதிபதி நிக்கோலஸ் சாண்டர்ஸ் கூறினார்: "இந்த வகையான ஓன்லைன் துஷ்பிரயோகம் நம் சமூகத்தில் ஒருவித ஈர்ப்பைப் பெற்றதாகத் தெரிகிறது, அது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது" என கூறினர். 

மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US