இலங்கை, இந்தியர்கள் உட்பட 35 மீனவர்கள்... பிரித்தானிய நிறுவனம் ஒன்றில் அடிமைகளாக வேலை பார்த்த கொடுமை

Indian fishermen Sri Lanka Fisherman Scotland
By Arbin Aug 19, 2024 10:31 AM GMT
Report

ஸ்கொட்லாந்தை சேர்ந்த குடும்பம் ஒன்று முன்னெடுக்கும் மீன் பிடி நிறுவனத்திலேயே இலங்கை, இந்தியா உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த 35 பேர்கள் அடிமைகளைப் போன்று நடத்தப்பட்டுள்ளனர்.

இந்தியா, இலங்கையை சேர்ந்த 35 பேர்கள்

கடந்த 2012 முதல் 2020 வரையில், பிரித்தானிய உள்விவகார அமைச்சகத்திற்கு தகவல் கிடைக்கும் வரையில் தொடர்புடைய மீனவர்கள் கொடூர சித்திரவதைகளை அனுபவித்துள்ளனர்.

இலங்கை, இந்தியர்கள் உட்பட 35 மீனவர்கள்... பிரித்தானிய நிறுவனம் ஒன்றில் அடிமைகளாக வேலை பார்த்த கொடுமை | Scottish Fishing Firm Treated Like Slaves

TN Trawlers என்ற அந்த நிறுவனம் Annan நகரில் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்திலேயே பிலிப்பைன்ஸ், கானா, இந்தியா மற்றும் இலங்கையை சேர்ந்த 35 பேர்கள் நவீன அடிமைகளாக நடத்தப்பட்டுள்ளனர்.

ஆனால் இந்த நிறுவனம் தற்போது அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்து வருகிறது. தங்கள் ஊழியர்களை நன்றாக கவனித்துக் கொள்வதாக்வும், உரிய சம்பளம் அளிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

அனுபவம் வாய்ந்த மீனவர் 28 வயதான Joel Quince தமது வாழ்க்கையே மாறப்போகிறது என்ற நம்பிக்கையில், கடந்த 2012ல் ஹீத்ரோ விமான நிலையத்தில் வந்திறங்கினார். பிலிப்பைன்ஸ் நாட்டவரான ஜோயலுக்கு வாரத்தில் 48 மணி நேரம் வேலை, மாதம் 660 பவுண்டுகள் சம்பளம் என ஒப்பந்தம் செய்துள்ளனர்.

அவரிடம் இருந்து ஆவணங்கள் மொத்தமும் கைப்பற்றிய பின்னர் மீன் பிடி தளத்திற்கே அழைத்துச் சென்றுள்ளனர். அங்கே அவருக்கு முதல் அதிர்ச்சி காத்திருந்துள்ளது. Mattanja படகில் வேலைக்கு என அழைத்து வரப்பட்ட அவரை Philomena படகில் வேலைக்கு கட்டாயப்படுத்தியுள்ளனர்.

நாளுக்கு 18 மணி நேரம் வேலை

அடுத்த அதிர்ச்சியாக நாளுக்கு 18 மணி நேரம் வேலை என்றும் வாரத்தில் 7 நாட்களும் வேலை செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளனர். அத்துடன், மாத சம்பளம் 637 பவுண்டுகள் என்றும் கூறியுள்ளனர்.

இலங்கை, இந்தியர்கள் உட்பட 35 மீனவர்கள்... பிரித்தானிய நிறுவனம் ஒன்றில் அடிமைகளாக வேலை பார்த்த கொடுமை | Scottish Fishing Firm Treated Like Slaves

அதாவது பிரித்தானியாவில் அமுலில் இருக்கும் குறைந்தபட்ச சம்பளத்தை விடவும் குறைவு. 2011 மற்றும் 2013ல் பல்வேறு நாடுகளில் இருந்து TN Trawlers என்ற அந்த நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்த சுமார் 30 மீனவர்களில் ஜோயலும் ஒருவர்.

நாளுக்கு 18 மணி நேரம் வேலை என்பதாலும் போதிய ஓய்வு இல்லை என்பதாலும் கடுமையாக அவதிப்பட்டதாக ஜோயல் தெரிவித்துள்ளார். அவர் மட்டுமல்ல, அவருடன் பணியாற்றும் அனைவரின் நிலையும் மிக மோசமாகவே இருந்துள்ளது.

மீன் பிடி படகில் போதிய உணவு, குடிநீர் வழங்கப்படுவதில்லை என்பதுடன், போதிய உடைகளும் அளிக்கப்படவில்லை என்றே அனைவரும் குறிப்பிட்டுள்ளனர். மீன் பிடிக்க செல்லாத நாட்களில், உரிமையாளர் Tom Nicholson என்பவரின் குடியிருப்பில் தோட்ட வேலைகளுக்கு மீனவர்களை பயன்படுத்தியுள்ளனர்.

வழக்கு கைவிடப்பட்டது

TN Trawlers நிறுவனத்திற்கு எதிராக பல்வேறு புகார்கள் அளிக்கப்பட்டுள்ளதை அடுத்து பிரித்தானிய பொலிசார் கண்காணித்து வந்துள்ளனர். மட்டுமின்றி 2007ல் சட்டவிரோதமாக பல நூறாயிரம் பவுண்டுகள் மதிப்பிலான மீன் பிடித்த வழக்கில் சிக்கிய இந்த நிறுவனம் 473,000 பவுண்டுகள் தொகையை திருப்பிச் செலுத்த தீர்ப்பானது.

இலங்கை, இந்தியர்கள் உட்பட 35 மீனவர்கள்... பிரித்தானிய நிறுவனம் ஒன்றில் அடிமைகளாக வேலை பார்த்த கொடுமை | Scottish Fishing Firm Treated Like Slaves

மேலும், 2009 முதல் 2011 வரையான காலகட்டத்தில் பாதுகாப்பு மீறல் காரணமாக சுமார் 150,000 பவுண்டுகள் அபராதமும் விதிக்கப்பட்டது. 2012ல் TN Trawlers படகில் இருந்து குதித்து வெளியேறிய 6 பிலிப்பைன்ஸ் மீனவர்கள் பொலிசாரிடம் புகார் அளித்தனர்.

மட்டுமின்றி, பிரித்தானிய உள்விவகார அமைச்சகத்தால் ஜோயல் உட்பட 18 மீனவர்கள் அடையாளம் காணப்பட்டு, அடிமைகளாக நடத்தப்பட்டவர்கள் என பட்டியலிடப்பட்டனர்.

மட்டுமின்றி, இந்தியரான விஷால் உட்பட மொத்தம் 35 பேர்கள் இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் இடம்பெற்றனர். ஆனால் நீண்ட 5 ஆண்டுகள் நீடித்த இந்த வழக்கில், சிலர் சந்தேக நபர்களை அடையாளம் காண தவறியதை அடுத்து, TN Trawlers நிறுவனம் மீதான வழக்கு கைவிடப்பட்டது.


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.   


மரண அறிவித்தல்

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொழும்பு, Zürich, Switzerland

15 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பாவற்குளம், கனடா, Canada

11 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், Bünde, Germany, Selm, Germany

11 Jul, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Aachen, Germany, Cologne, Germany

27 Jun, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை வடக்கு

11 Jul, 2021
மரண அறிவித்தல்

அல்லைப்பிட்டி 2ம் வட்டாரம், Aulnay-sous-Bois, France

08 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஈச்சமோட்டை, இறம்பைக்குளம், Scarborough, Canada

12 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வாழைச்சேனை, Toronto, Canada

10 Jul, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Markham, Canada

07 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பேர்ண், Switzerland

12 Jul, 2020
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், கொழும்பு

11 Jun, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், பிரான்ஸ், France

10 Jul, 2020
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, Toronto, Canada

07 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Toronto, Canada

06 Jul, 2025
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US