இலங்கை, இந்தியர்கள் உட்பட 35 மீனவர்கள்... பிரித்தானிய நிறுவனம் ஒன்றில் அடிமைகளாக வேலை பார்த்த கொடுமை

Indian fishermen Sri Lanka Fisherman Scotland
By Arbin Aug 19, 2024 10:31 AM GMT
Report

ஸ்கொட்லாந்தை சேர்ந்த குடும்பம் ஒன்று முன்னெடுக்கும் மீன் பிடி நிறுவனத்திலேயே இலங்கை, இந்தியா உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த 35 பேர்கள் அடிமைகளைப் போன்று நடத்தப்பட்டுள்ளனர்.

இந்தியா, இலங்கையை சேர்ந்த 35 பேர்கள்

கடந்த 2012 முதல் 2020 வரையில், பிரித்தானிய உள்விவகார அமைச்சகத்திற்கு தகவல் கிடைக்கும் வரையில் தொடர்புடைய மீனவர்கள் கொடூர சித்திரவதைகளை அனுபவித்துள்ளனர்.

இலங்கை, இந்தியர்கள் உட்பட 35 மீனவர்கள்... பிரித்தானிய நிறுவனம் ஒன்றில் அடிமைகளாக வேலை பார்த்த கொடுமை | Scottish Fishing Firm Treated Like Slaves

TN Trawlers என்ற அந்த நிறுவனம் Annan நகரில் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்திலேயே பிலிப்பைன்ஸ், கானா, இந்தியா மற்றும் இலங்கையை சேர்ந்த 35 பேர்கள் நவீன அடிமைகளாக நடத்தப்பட்டுள்ளனர்.

ஆனால் இந்த நிறுவனம் தற்போது அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்து வருகிறது. தங்கள் ஊழியர்களை நன்றாக கவனித்துக் கொள்வதாக்வும், உரிய சம்பளம் அளிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

அனுபவம் வாய்ந்த மீனவர் 28 வயதான Joel Quince தமது வாழ்க்கையே மாறப்போகிறது என்ற நம்பிக்கையில், கடந்த 2012ல் ஹீத்ரோ விமான நிலையத்தில் வந்திறங்கினார். பிலிப்பைன்ஸ் நாட்டவரான ஜோயலுக்கு வாரத்தில் 48 மணி நேரம் வேலை, மாதம் 660 பவுண்டுகள் சம்பளம் என ஒப்பந்தம் செய்துள்ளனர்.

அவரிடம் இருந்து ஆவணங்கள் மொத்தமும் கைப்பற்றிய பின்னர் மீன் பிடி தளத்திற்கே அழைத்துச் சென்றுள்ளனர். அங்கே அவருக்கு முதல் அதிர்ச்சி காத்திருந்துள்ளது. Mattanja படகில் வேலைக்கு என அழைத்து வரப்பட்ட அவரை Philomena படகில் வேலைக்கு கட்டாயப்படுத்தியுள்ளனர்.

நாளுக்கு 18 மணி நேரம் வேலை

அடுத்த அதிர்ச்சியாக நாளுக்கு 18 மணி நேரம் வேலை என்றும் வாரத்தில் 7 நாட்களும் வேலை செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளனர். அத்துடன், மாத சம்பளம் 637 பவுண்டுகள் என்றும் கூறியுள்ளனர்.

இலங்கை, இந்தியர்கள் உட்பட 35 மீனவர்கள்... பிரித்தானிய நிறுவனம் ஒன்றில் அடிமைகளாக வேலை பார்த்த கொடுமை | Scottish Fishing Firm Treated Like Slaves

அதாவது பிரித்தானியாவில் அமுலில் இருக்கும் குறைந்தபட்ச சம்பளத்தை விடவும் குறைவு. 2011 மற்றும் 2013ல் பல்வேறு நாடுகளில் இருந்து TN Trawlers என்ற அந்த நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்த சுமார் 30 மீனவர்களில் ஜோயலும் ஒருவர்.

நாளுக்கு 18 மணி நேரம் வேலை என்பதாலும் போதிய ஓய்வு இல்லை என்பதாலும் கடுமையாக அவதிப்பட்டதாக ஜோயல் தெரிவித்துள்ளார். அவர் மட்டுமல்ல, அவருடன் பணியாற்றும் அனைவரின் நிலையும் மிக மோசமாகவே இருந்துள்ளது.

மீன் பிடி படகில் போதிய உணவு, குடிநீர் வழங்கப்படுவதில்லை என்பதுடன், போதிய உடைகளும் அளிக்கப்படவில்லை என்றே அனைவரும் குறிப்பிட்டுள்ளனர். மீன் பிடிக்க செல்லாத நாட்களில், உரிமையாளர் Tom Nicholson என்பவரின் குடியிருப்பில் தோட்ட வேலைகளுக்கு மீனவர்களை பயன்படுத்தியுள்ளனர்.

வழக்கு கைவிடப்பட்டது

TN Trawlers நிறுவனத்திற்கு எதிராக பல்வேறு புகார்கள் அளிக்கப்பட்டுள்ளதை அடுத்து பிரித்தானிய பொலிசார் கண்காணித்து வந்துள்ளனர். மட்டுமின்றி 2007ல் சட்டவிரோதமாக பல நூறாயிரம் பவுண்டுகள் மதிப்பிலான மீன் பிடித்த வழக்கில் சிக்கிய இந்த நிறுவனம் 473,000 பவுண்டுகள் தொகையை திருப்பிச் செலுத்த தீர்ப்பானது.

இலங்கை, இந்தியர்கள் உட்பட 35 மீனவர்கள்... பிரித்தானிய நிறுவனம் ஒன்றில் அடிமைகளாக வேலை பார்த்த கொடுமை | Scottish Fishing Firm Treated Like Slaves

மேலும், 2009 முதல் 2011 வரையான காலகட்டத்தில் பாதுகாப்பு மீறல் காரணமாக சுமார் 150,000 பவுண்டுகள் அபராதமும் விதிக்கப்பட்டது. 2012ல் TN Trawlers படகில் இருந்து குதித்து வெளியேறிய 6 பிலிப்பைன்ஸ் மீனவர்கள் பொலிசாரிடம் புகார் அளித்தனர்.

மட்டுமின்றி, பிரித்தானிய உள்விவகார அமைச்சகத்தால் ஜோயல் உட்பட 18 மீனவர்கள் அடையாளம் காணப்பட்டு, அடிமைகளாக நடத்தப்பட்டவர்கள் என பட்டியலிடப்பட்டனர்.

மட்டுமின்றி, இந்தியரான விஷால் உட்பட மொத்தம் 35 பேர்கள் இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் இடம்பெற்றனர். ஆனால் நீண்ட 5 ஆண்டுகள் நீடித்த இந்த வழக்கில், சிலர் சந்தேக நபர்களை அடையாளம் காண தவறியதை அடுத்து, TN Trawlers நிறுவனம் மீதான வழக்கு கைவிடப்பட்டது.


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.   


மரண அறிவித்தல்

குப்பிளான், London, United Kingdom

01 Sep, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில், வண்ணார்பண்ணை, Colombes, France

11 Sep, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, Le Perreux-sur-Marne, France

09 Sep, 2024
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

08 Sep, 2024
மரண அறிவித்தல்

பொன்னாலை, Bielefeld, Germany, Nuremberg, Germany

07 Sep, 2024
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Mönchengladbach, Germany

05 Sep, 2024
மரண அறிவித்தல்

நல்லூர் தெற்கு, Sucy-en-Brie, France, Croydon, United Kingdom

20 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

24 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், லியோன், France, சுவிஸ், Switzerland, இலங்கை

13 Sep, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Buffalo, United States

06 Sep, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, Scarbrough, Canada

11 Sep, 2024
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய்

10 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் கிழக்கு, ஜேர்மனி, Germany, Catford, United Kingdom

11 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கோப்பாய் தெற்கு

25 Aug, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், திருநெல்வேலி

13 Sep, 2021
மரண அறிவித்தல்

மீசாலை, வெள்ளாம்போக்கட்டி

10 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, திருநகர்

12 Sep, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, கரவெட்டி, Montreal, Canada, திருகோணமலை

12 Sep, 2023
25ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, புங்குடுதீவு 6ம் வட்டாரம்

17 Sep, 1999
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

ஆனைப்பந்தி, சிறாம்பியடி, Toronto, Canada

11 Aug, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Toronto, Canada

11 Sep, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

11 Sep, 2019
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சூரிச், Switzerland

10 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

யாழ் நவாலி கிழக்கு, Jaffna

10 Sep, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Bad Bergzabern, Germany

06 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், அராலி வடக்கு, யாழ்ப்பாணம்

13 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்

மண்டைதீவு, திருநெல்வேலி, Troyes, France

04 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொழும்பு

07 Sep, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US