7 ஆண்டு சிறைவாசத்திற்குப் பின் விடுதலை! ஸ்காட்லாந்து சீக்கியர் மீதான வழக்கில் திருப்பம்
7 ஆண்டு சிறைவாசத்துக்கு பின் ஸ்காட்லாந்து சீக்கியர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
ஸ்காட்லாந்து சீக்கியர் விடுதலை
இந்தியாவில் கைது செய்யப்பட்ட ஸ்காட்லாந்து சீக்கியர் ஜக்தார் சிங் ஜோஹல்(Jagtar Singh Johal), 7 ஆண்டு கால சட்டப் போராட்டத்திற்குப் பிறகு, ஒரு தீவிரவாத வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
பஞ்சாப் மாநிலம் மோகா மாவட்ட நீதிமன்றம் வழங்கிய இந்த தீர்ப்பு, ஜோஹல் மீது இந்திய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் சுமத்தப்பட்ட சதி குற்றச்சாட்டை ரத்து செய்துள்ளது.
மேலும், "பயங்கரவாதக் குழுவில்" உறுப்பினராக இருந்ததாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
ஜோஹல் கைது பின்னணி
2017 ஆம் ஆண்டு, பஞ்சாபில் தனது திருமணத்திற்கு பிறகு சில வாரங்களில் ஜோஹல் கைது செய்யப்பட்டார்.
மத மற்றும் அரசியல் பிரமுகர்களை இலக்கு வைத்து படுகொலை செய்த வழக்குகளில் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
மீதமுள்ள வழக்குகள் மற்றும் சர்வதேச அழுத்தம்
இந்த விடுதலை ஒரு முக்கிய முன்னேற்றம் என்றாலும், ஜோஹல் இன்னும் 8 ஒத்த வழக்குகளில் சிக்கியுள்ளார்.
இந்த வழக்குகள் அனைத்தும் மரண தண்டனை விதிக்கக்கூடியவை. அனைத்து வழக்குகளிலும் உள்ள குற்றச்சாட்டுகள் ஒரே மாதிரியாக இருப்பதால், இந்த விடுதலை மற்ற வழக்குகளையும் ரத்து செய்வதற்கு ஒரு வலுவான முன்னுதாரணமாக அமைகிறது என்று அவரது சட்டக் குழு தெரிவித்துள்ளது.
இந்த தீர்ப்பு, ஜோஹலை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலுப்படுத்தியுள்ளது.
அவரது சகோதரர் குர்பிரீத் சிங் ஜோஹல், இங்கிலாந்து அரசு விரைந்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். "எனது சகோதரர் 7 ஆண்டுகால வாழ்க்கையை இழந்துவிட்டார்.
இங்கிலாந்து அரசு அவரை உடனடியாக வீட்டிற்கு அழைத்து வர வேண்டும்" என்று அவர் பிபிசி ஸ்காட்லாந்து செய்தியிடம் தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |