அமெரிக்காவின் முக்கிய நகரம் பெரும் சுனாமியால் மூழ்கும்... நிலநடுக்கத்தால் அதிரும்: வெளிவரும் தகவல்
அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தின் முக்கிய நகரமான சியாட்டில் பெரும் நிலநடுக்கத்திற்கு இலக்காகி பாரிய சுனாமியால் மூழ்கும் என ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
வாஷிங்டன் மாகாண அதிகாரிகளின் ஆய்விலேயே குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 740,000 மக்கள் வசிக்கும் சியாட்டில் நகரின் முக்கிய பகுதிகள் இதனால் நீரில் மூழ்கும் எனவும் கூறுகின்றனர்.
42 அடி பேரலைகள் மொத்த நகரையும் மூழ்கடிக்கும் என்றே ஆய்வில் குறிப்பிடுகின்றனர். மேலும், 30 மைல்கள் தொலைவில் உள்ள டகோமா துறைமுகப் பகுதி மக்களால் இந்த பேரலையை கண்கூடாக காண முடியும் எனவும் கூறுகின்றனர்.
சியாட்டில் மேயர் புரூஸ் ஹாரல் தெரிவிக்கையில், குறித்த ஆய்வறிக்கையானது இயற்கை பேரிடர் தொடர்பில் திட்டமிட உதவும் என தெரிவித்துள்ளார். இதனிடையே, இதுபோன்றதொரு உக்கிரமான நிலநடுக்கம் சியாட்டில் பகுதியில் 1100 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், கடந்த 3,500 ஆண்டுகளில் சியாட்டில் பகுதியில் 6.5 ரிக்டர் அளவில் ஐந்து மேலதிக நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாகவும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.