இறைச்சி ஏற்றுமதியை பாதித்துள்ள ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல்: கிழக்கு ஜேர்மனியில் மீண்டும் ஒரு சம்பவம்
கிழக்கு ஜேர்மன் மாகாணம் ஒன்றில் மீண்டும் ஒரு காட்டுப்பன்றிக்கு ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Brandenburg மாகாணத்திலுள்ள Uckermark என்ற இடத்தில் மேலும் ஒரு காட்டுப்பன்றிக்கு ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மாகாண சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
Uckermarkஇல் காட்டுப்பன்றி ஒன்றிற்கு ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இது இரண்டாவது முறையாகும்.
2020ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் முதன்முதலாக Brandenburgஇல் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இதுவரை மொத்தம் 1,670 காட்டுப்பன்றிகளுக்கு ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Saxony மாகாணத்தில் 456 காட்டுப்பன்றிகளுக்கு இந்த பிரச்சினை கண்டறியப்பட்டுள்ளது.
2020ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் முதன்முதலாக ஜேர்மனியில் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சீனா முதல் பன்றி இறைச்சி பயன்படுத்தும் பல நாடுகள் ஜேர்மனியிலிருந்து பன்றி இறைச்சி இறக்குமதி செய்வதை நிறுத்திவிட்டது குறிப்பிடத்தக்கது.
போலந்து நாட்டிலிருந்து ஜேர்மனிக்கும் நுழையும் காட்டுப்பன்றிகளிடமிருந்தே இந்த பன்றிக்காய்ச்சல் ஜேர்மனிக்குள் பரவியுள்ளது. இந்த நோயால் மனிதர்களுக்கு பாதிப்பில்லை என்றாலும், அது பன்றிகளை பலிவாங்கக்கூடியதாகும்.
தற்போது போலந்து எல்லைப் பகுதியில் ஏதேனும் காட்டுப்பன்றிகள் இறந்து கிடக்கின்றனவா என்று தேடும் முயற்சியில் அதிகாரிகள் இறங்கியுள்ளார்கள்.