பல மாதங்களாக ஜேர்மன் அதிகாரிகள் மேற்கொண்ட ரகசிய விசாரணை: பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு
வலது சாரி ஆதரவு இளைஞர் ஒருவர் தாக்குதல் நடத்தலாம் என்ற சந்தேகத்தின்பேரில், பல மாதங்களாக ரகசியமாக அவரை கண்காணித்துவந்த ஜேர்மன் அதிகாரிகள், நேற்று அவரை கைது செய்தனர்.
பெருகி வரும் வலது சாரி தீவிரவாதம்
ஜேர்மனியில், வலது சாரி தீவிரவாதம் பெருகி வரும் நிலையில், அது தொடர்பான தாக்குதல்களும் அதிகரித்துவருகின்றன.
2019ஆம் ஆண்டு, ஜூன் மாதம், ஜேர்மனி அகதிகளை வரவேற்பதற்கு ஆதரவு தெரிவித்த Walter Lübcke என்னும் அரசியல்வாதி, Stephan Ernst என்னும் வலது சாரி ஆதரவாளரால் அவரது வீட்டிலேயே சுட்டுக்கொல்லப்பட்டார்.
அடுத்த ஆண்டு, Hanau என்னுமிடத்தில் 41 வயது வலது சாரி ஆதரவாளர் ஒருவர் 9 பேரை இன அடிப்படையில் சுட்டுக்கொன்றுவிட்டு, வீட்டுக்குச் சென்று தன் தாயை சுட்டுக்கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்டார்.
இந்த ஆண்டு மே மாதம், 21 வயது இளைஞர் ஒருவர் தீவிரவாதத் தாக்குதல் ஒன்றை நிகழ்த்தத் திட்டமிட்டிருந்த நிலையில், அவரது திட்டத்தை முறியடித்த பொலிசார், அவரை கைது செய்தனர், அவருக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு
இப்படிப்பட்ட ஒரு சூழலில்தான், நேற்று Hesse மாகாணத்தில் 18 வயது இளைஞர் ஒருவரை அதிகாரிகள் கைது செய்தனர். அவர் தொடர்ந்து இணையத்தில் தனது அரசியல் நோக்கத்துக்காக மக்களைக் கொல்ல இருப்பதாக மிரட்டல் விடுத்துக்கொண்டே இருந்துள்ளார்.
பல மாதங்களாக அவரைக் கண்காணித்துவந்த ஜேர்மன் அதிகாரிகள், இம்மதம் 15ஆம் திகதி அவரது வீட்டை சோதனையிட்டனர். அப்போது அவரது வீட்டிலிருந்து ஆயுதங்களும், குண்டுகளும், கணினிகள் மற்றும் மொபைல் போன்களும் கைப்பற்றப்பட்டன.
முதலில் அவர் குற்றச்செயல்களில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக அவரது வீட்டில் நடத்திய சோதனையில் தெரியவந்ததாக தெரிவித்த அதிகாரிகள், பின்னர், அவர் துப்பாக்கி விதிகளை மீறியது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.
நிகழவிருந்த பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதால், அந்த இளைஞரை கைது செய்த அதிகாரிகளுக்கு பாராட்டுகள் குவிகின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |